Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு ஆவின் பால் பாக்கெட்டுக்கு ரூ12 கொள்ளை அடிக்கின்றனர்: அண்ணாமலை ஆவேசம்..!

Webdunia
சனி, 25 நவம்பர் 2023 (14:44 IST)
ஒரு ஆவின் பால் பாக்கெட்டுக்கு 12 ரூபாய் கொள்ளை அடிக்கிறார்கள் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இன்று முதல் 4.5% உள்ள கொழுப்பு சத்துள்ள பச்சை நிற பால் விநியோகம் செய்யப்படாது என தமிழக பால்வளத்துறை அறிவித்துள்ள நிலையில் இது குறித்து அண்ணாமலை ஆவேசமாக குற்றச்சாட்டுகளை கூறியுள்ளார். 
 
ஒவ்வொரு ஆவின் பால் பாக்கெட்டுக்கும் 10 முதல் 12 ரூபாய் கொள்ளை அடிக்கின்றனர் என்றும் தனியார் பால் கம்பெனிகளுக்கும் ஆவினுக்கும் மறைமுக தொடர்பு உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 
தமிழ்நாடு அரசியலில் அடிப்படையில் ஒரு நாகரீகம் தேவை என்றும் திமுகவினர் அவதூறுகளை அள்ளி வீசுகின்றனர் என்றும் காமராஜரை அவதூறுகள் மூலம் தான் தோற்கடித்தனர் என்றும் அவர் தெரிவித்தார்.
 
மேலும் அமைச்சர் மனோ தங்கராஜ் நாட்கள் எண்ணப்பட்டு வருகின்றன என்றும் பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேதியில் ஆசிரியர் குடும்பமே படுகொலை.. குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் விபத்து: என்ன நடந்தது?

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை திடீர் பாதிப்பு.. என்ன காரணம்?

ஜாமீனில் வெளிவந்த மகா விஷ்ணு.. சிறைவாசலில் ஆதரவாளர்களுக்கு ஆசி..!

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments