Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாடு காவல்துறைக்கு பாராட்டுகள் கூறிய அண்ணாமலை

தேசிய அளவிலான காவல்துறை
Webdunia
சனி, 14 ஜனவரி 2023 (15:09 IST)
’தேசிய அளவிலான காவல்துறையினருக்கான துப்பாக்கிச் சூடு போட்டியில் பதக்கம் வென்ற தமிழ் நாடு காவல்துறையினருக்கு பாஜக தலைவர் அண்ணாமலை பாராட்டுகள் தெரிவித்துள்ளார்.

23 வது தேசிய அளவிலான காவல்துறையினருக்கான துப்பாக்கிச் சூடு போட்டி  ஜனவரி 9 முதல் 13 வரை செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கத்தில் உள்ள தமிழ் நாடு காவல்துறை அதிரடிப்படை துப்பாக்கிச்சுடும் மைதானத்தில் நடந்து வருகிறது.

இதில்,   முதலிடம் வென்ற தமிழகக் காவல்துறைக்கு பாஜக தலைவர் அண்ணாமலை பாராட்டுகள் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் தன் டுவிட்டர் பக்கத்தில்,

‘’தேசிய அளவிலான காவல்துறையினருக்கான துப்பாக்கிச் சூடு போட்டியில் முதல் இடமும், ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப்பில் இரண்டாவது இடமும் வென்ற தமிழக காவல்துறைக்குப் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், கைத்துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், முதலிடம் வென்ற தமிழக வீரர் ஆர். சதிசிவனேஷிற்கு என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதன்முறையாக, மாநில காவல்துறையைச் சேர்ந்த வீரர் இப்போட்டியில் வெல்வது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.  தமிழக அணி தேசிய அளவில் மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு.. 4858 பறக்கும் படைகள் தயார்..!

பேருந்தில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவி.. ஓட்டுனர் அலட்சியம் காரணமா?

இன்று சிஎஸ்கே - ஆர்சிபி போட்டி.. சென்னை சேப்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்..!

இந்த ஆண்டு முதல் மூன்று CA தேர்வுகள்: தேர்ச்சி விகிதம் அதிகமாக வாய்ப்பு..!

பள்ளிகள் கட்ட ரூ.7500 நிதி ஒதுக்கீடு.. ஆனால் மரத்தடியில் வகுப்புகள்: அண்ணாமலை ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments