Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாடு காவல்துறைக்கு பாராட்டுகள் கூறிய அண்ணாமலை

Webdunia
சனி, 14 ஜனவரி 2023 (15:09 IST)
’தேசிய அளவிலான காவல்துறையினருக்கான துப்பாக்கிச் சூடு போட்டியில் பதக்கம் வென்ற தமிழ் நாடு காவல்துறையினருக்கு பாஜக தலைவர் அண்ணாமலை பாராட்டுகள் தெரிவித்துள்ளார்.

23 வது தேசிய அளவிலான காவல்துறையினருக்கான துப்பாக்கிச் சூடு போட்டி  ஜனவரி 9 முதல் 13 வரை செங்கல்பட்டு மாவட்டம் ஒத்திவாக்கத்தில் உள்ள தமிழ் நாடு காவல்துறை அதிரடிப்படை துப்பாக்கிச்சுடும் மைதானத்தில் நடந்து வருகிறது.

இதில்,   முதலிடம் வென்ற தமிழகக் காவல்துறைக்கு பாஜக தலைவர் அண்ணாமலை பாராட்டுகள் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் தன் டுவிட்டர் பக்கத்தில்,

‘’தேசிய அளவிலான காவல்துறையினருக்கான துப்பாக்கிச் சூடு போட்டியில் முதல் இடமும், ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப்பில் இரண்டாவது இடமும் வென்ற தமிழக காவல்துறைக்குப் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலும், கைத்துப்பாக்கிச் சுடுதல் போட்டியில், முதலிடம் வென்ற தமிழக வீரர் ஆர். சதிசிவனேஷிற்கு என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதன்முறையாக, மாநில காவல்துறையைச் சேர்ந்த வீரர் இப்போட்டியில் வெல்வது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.  தமிழக அணி தேசிய அளவில் மேலும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments