Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணாமலைக்கு அடிப்படை விஷயம் கூட தெரியவில்லை- அதிமுக புகார்

Sinoj
வியாழன், 28 மார்ச் 2024 (21:20 IST)
18 வது மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை  7 கட்டங்களாக நடைபெறுவதாகவும் மக்களவை தேர்தலோடு 4 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறும் என்றும் பதிவான வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தமிழ் நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது என்று   தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார்   அறிவித்தார். 
 
அதன்படி தேர்தல் விதிகள்  நாடுமுழுவதும் அமல்படுத்தப்பட்டது.  நாடு முழுவதும்  பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக, நாம் தமிழர்  உள்ளிட்ட அனைத்து கட்சிகளும்  தீவிர  பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்
 
இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வேட்பு மனுதாக்கல் செய்திருந்த நிலையில், இதில் குளறுபடி இருப்பதாக அதிமுக புகார் தெரிவித்துள்ளது.
 
இதுகுறித்து கோவையில் அதிமுக வழக்கறிஞர் கோபால கிருஷ்ணன் கூறியதாவது:   
 
Indian Non Judical பத்திரம் மூலம் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்ற விதிமுறைக்கு மாறாக, நீதிமன்ற பயன்பாட்டிற்காக  India Court Free பத்திரத்தில்  பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
 
ஐ.ஐ.எம்-ல் படித்ததாக கூறும் அண்ணாமலைக்கு அடிப்படை விஷயம் கூட தெரியவில்லை. மாநிலத் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளோம் என்று தெரிவித்துள்ளார். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தாயை கொன்றுவிட்டு தற்கொலை செய்துக் கொண்ட மகன்! கடைசியில் நடந்த திருப்பம்!

8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! விரைவில் அதிகரிக்கும் வெயில்! - வானிலை ஆய்வு மையம்!

சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்! - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

விமானி இல்லாததால் மணிக்கணக்கில் காத்திருப்பு.. டேவிட் வார்னர் ஆதங்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments