அதிநவீன வானிலை மைய சூப்பர் கம்ப்யூட்டருக்கான 10 கோடி ரூபாய் என்ன ஆனது? அண்ணாமலை

Webdunia
புதன், 20 டிசம்பர் 2023 (07:40 IST)
அதிநவீன வானிலை மைய சூப்பர் கம்ப்யூட்டருக்கான  10 கோடி ரூபாய் என்ன ஆனது? என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

 வானிலை ஆய்வு மையம் துல்லியமாக தகவலை தரவில்லை என அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா  தெரிவித்த நிலையில் அதற்கு அண்ணாமலை பதில் கூறியுள்ளார்.

வானிலை ஆய்வு மையத்தை பொருத்தவரை முன்னெச்சரிக்கை மட்டுமே செய்ய முடியும் என்றும் ஒரு இடத்தில் எத்தனை சென்டிமீட்டர் மழை பெயும் என்பதை யாராலும் கணிக்க முடியாது என்றும் தெரிவித்தார்.

மேலும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தனது முதல் பட்ஜெட்டில் அதிநவீன வானிலை மைய சூப்பர் கம்ப்யூட்டருக்காக 10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. அந்த பணம் என்ன ஆனது? சூப்பர் கம்ப்யூட்டர் ஏன் வாங்கவில்லை? அதற்கு ஒதுக்கப்பட்ட ரூ.10 கோடிக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று தெரிவித்தார்.  

சூப்பர் கம்ப்யூட்டர் வாங்குவதற்காக 10 கோடி ரூபாய் ஒதுக்கி  இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் அந்த கம்ப்யூட்டர் எங்கே என்ற கேள்விக்கு திமுக அரசு என்ன பதில் கூறப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவுடன் பேச்சுவார்த்தை?.. காய் நகர்த்தும் சசிகலா!.. விஜய் சம்மதிப்பாரா?...

விஜய்யை நம்பி நாட்டை ஒப்படைத்தால் குத்தாட்டம் தான் போடுவார்.. திட்டங்கள் எதுவும் நடக்காது.. திண்டுக்கல் லியோனி

அஜித்குமார் கொலை வழக்கு!.. போலீஸுக்கு பாடம் புகட்டுவோம்!.. உயர்நீதிமன்றம் காட்டம்!...

விஜய்க்கு எந்த கட்சி யாருடன் கூட்டணியில் உள்ளது என்று கூட தெரியாது: ஈபிஎஸ் கலாய்ப்பு..!

3 சிலிண்டர்கள் இலவசம்.. கல்விக்கடன் தள்ளுபடி.. தொழில் தொடங்க வட்டியில்லா கடன்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments