பொறியியல் தேர்வு குறித்து அண்ணா பல்கலையின் முக்கிய அறிவிப்பு!

Webdunia
திங்கள், 15 நவம்பர் 2021 (09:38 IST)
பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான தேர்வு குறித்து அண்ணா பல்கலைக்கழகம் சற்றுமுன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்ததால் பொறியியல் கல்லூரிகள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மூடப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது பொறியியல் கல்லூரியில் மீண்டும் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஊரடங்கு காலத்தில் ஆன்லைனில் மட்டுமே தேர்வு நடைபெற்றது என்ற நிலையில் தற்போது பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு முறையில் மாற்றம் இல்லை என்றும் நேரடி எழுத்துத்தேர்வு நடைபெறும் என்றும் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்
 
பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு இந்த ஆண்டும் ஆன்லைன் மூலமே தேர்வு நடைபெறும் என செய்திகள் கசிந்து வந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் அந்த செய்தியை மறுத்து எழுத்துத் தேர்வு நடைபெறும் என திட்டவட்டமாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க அனுமதிக்க முடியாது. ஆர்.எஸ். பாரதி மனுவை தள்ளுபடி செய்வேன்: நீதிபதி அதிரடி..!

தமிழகத்தில் பீகாரிகள் அவமதிக்கப்படுகிறார்களா? பிரதமரின் சர்ச்சை பேச்சு..!

கணவரை கொன்று புதைத்த மனைவி மற்றும் மகள்கள்: வெளியூர் சென்றதாக 50 நாட்களாக நாடகம்..!

சிபிஎஸ்இ 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை.. அதிகாரப்பூர்வமாக வெளியீடு..!

திருமணத்திற்கு முந்தைய நாள் மணமகன் வீட்டில் மர்மமாக மரணம் அடைந்த மணமகள்.. அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments