Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கனமழையால் அண்ணா பல்கலைக்கழகத்தின் அனைத்து தேர்வுகளும் ரத்து: மறுதேர்வு தேதி அறிவிப்பு

கனமழையால் அண்ணா பல்கலைக்கழகத்தின் அனைத்து தேர்வுகளும் ரத்து: மறுதேர்வு தேதி  அறிவிப்பு
, திங்கள், 23 நவம்பர் 2015 (20:45 IST)
சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்து வருவதால் அண்ணா பல்கலைக்கழகழகம் நவம்பர் 23 ஆம் தேதி முதல் நடத்தப்பட இருந்த அனைத்து தேர்வுகளையும் தற்போது மீண்டும் ரத்து செய்துள்ளது.



கன்னியாகுமரி கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் நீடித்து கொண்டிருப்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதனால் அண்ணா பல்கலைகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்ப கல்லூரி, குரோம்பேட்டை எம்ஐடி கல்லூரி ஆகியவற்றுக்கு ஒத்திவைக்கப்பட்ட நவம்பர் 23 முதல் 28ஆம் தேதி வரை நடக்க இருந்த தேர்வுகள் இப்போது டிசம்பர் 14-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை நடத்தப்படும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது
 
இதுபோல் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் மற்ற கல்லூரிகளுக்கும் ஒத்திவைக்கப்பட்ட நவம்பர் 23 ஆம் தேதி தேர்வு 5.1.2016 அன்றும், நவம்பர் 24 ஆம் தேதி தேர்வு 6.1.2016 அன்றும், நவம்பர் 25 ஆம் தேதி தேர்வு 7.1.2016 அன்றும், நவம்பர் 26 ஆம் தேதி தேர்வு 8.1.2016 அன்றும், நவம்பர் 27 ஆம் தேதி தேர்வு 9.1.2016 அன்றும், நவம்பர் 28-ஆம் தேதி தேர்வு 11.1.2016 அன்றும் நடத்தப்படும் என்று அண்ணா பல்கலைக்கழக இணையதள பக்கத்தில் அறிவித்துள்ளது.

மேலும், மறுதேர்வு குறித்த புதிய தேர்வு அட்டவணையை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இந்த தேர்வு அட்டவணையை www.annauniv.edu என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்
 

Share this Story:

Follow Webdunia tamil