Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு: மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அண்ணா பல்கலை

Webdunia
வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (17:13 IST)
கல்லூரி மாணவர்கள் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வினை கண்டிப்பாக எழுதியே தீரவேண்டும் என யுஜிசி அறிவுறுத்தியதை அடுத்து வரும் 22 முதல் 29 வரை இந்த தேர்வுகள் நடைபெற உள்ளன என்று அறிவிக்கப்பட்டது 
 
இந்த தேர்வுக்கான ஏற்பாடுகளை அண்ணா பல்கலைக்கழகம் செய்து வருகிறது என்பதும் இம்முறை மாணவர்கள் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் எழுத உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சற்று முன்னர் அண்ணா பல்கலைக்கழகம் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு எழுதும் மாணவர்கள் தங்களுடைய செல்போன் எண் மற்றும் இ-மெயில் முகவரியை அண்ணா பல்கலைக்கழகத்தில் உடனடியாக பதிவு செய்ய வேண்டும் என அறிவித்துள்ளது
 
இமெயில் மற்றும் மொபைல் எண்ணை பதிவு செய்ய காலக்கெடு எதுவும் வழங்கப்படவில்லை என்றாலும் மாணவர்கள் தற்போது உடனடியாக தங்கள் செல்போன் எண் மற்றும் இ-மெயிலை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments