Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வீர, தீர செயல்களுக்கான அண்ணா பதக்கம் பெற அரசு அழைப்பு

வீர, தீர செயல்களுக்கான அண்ணா பதக்கம் பெற அரசு அழைப்பு
, புதன், 14 அக்டோபர் 2015 (05:15 IST)
தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் வீர, தீர செயல்களுக்கான அண்ணா பதக்கம் பெற தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்காலம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
 

 
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
 
தமிழக அரசு சார்பில், வீர, தீர செயல்களுக்கான அண்ணா பதக்கம் ஒவ்வொரு ஆண்டும் முதல்வரால் குடியரசு தின விழாவின் போது வழங்கப்படும்.  பொதுமக்களில் 3 பேருக்கும், அரசு ஊழியர்களில் 3 பேருக்கும் பதக்கங்கள் வழங்கப்படும். பதக்கம் பெற வயது வரம்பு இல்லை. ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலை, ஒரு பதக்கம் மற்றும் தகுதியுரை ஆகியவை கிடைக்கும். எனவே, தகுதியான வீர, தீர செயல் புரிந்த தமிழகத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
 
விண்ணப்பங்களை மாவட்டஆட்சியர் அலுவலகம் மூலம் பெற்று, அரசு முதன்மை செயலாளர், பொதுத்துறை, தலைமை செயலகம், சென்னை-600 009 என்ற முகவரிக்கு  டிசம்பர் 15ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என கூறப்பட்டுள்ளது. 
 

Share this Story:

Follow Webdunia tamil