ஆளுநர் பட்டமளிப்பு விழாவை புறக்கணித்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் புறக்கணிப்பு..!

Siva
புதன், 13 மார்ச் 2024 (11:52 IST)
ஆளுநர் கலந்து கொள்ளும் பட்டமளிப்பு  விழாவை ஏற்கனவே ஒரு சில அமைச்சர்கள் புறக்கணித்த நிலையில் தற்போது அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆளுநர் பட்டமளிப்பு விழாவை புறக்கணித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
சென்னை வேப்பெறியில் நடைபெறும் கால்நடை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா இன்று நடைபெறும் நிலையில் இந்த விழாவில் ஆளுநர் ஆர்என் ரவி மற்றும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்பதாக தகவல் வெளியானது.
 
இந்த நிலையில் கால்நடை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள ஆளுநர் ரவி வந்துள்ள நிலையில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இந்த விழாவை புறக்கணித்து விட்டதாக புறப்படுகிறது.
 
 இந்த பட்டமளிப்பு விழாவில் 1166 பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்ட உள்ளதாகவும் ஆளுநர் ரவியே இந்த விழாவை முழுமையாக நடத்தி பட்டங்களை அளிப்பார் என்றும் கூறப்படுகிறது. இந்த விழாவை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஏன் புறக்கணித்தார் என்ற தகவல் தெரியவில்லை என்றாலும் இந்த விழாவை அவர் புறக்கணித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நயினார் நாகேந்திரன் - எடப்பாடி பழனிசாமி பேச்சுவார்த்தை! அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பா?

வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டால் சமையலறை கருவிகளுடன் தயாராக இருங்கள்: மம்தா பானர்ஜி ஆவேசம்

அப்பாவை மதிக்காதவர் விஜய்!.. காணாம போயிடுவார்... பிடி செல்வகுமார் பேட்டி...

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments