Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அன்புமணி ஒரே ஒரு நாள் பாராளுமன்றம் வந்தார், துரோகம் செய்தார்: கனிமொழி ஆவேசம்

Webdunia
செவ்வாய், 17 டிசம்பர் 2019 (18:30 IST)
ஒரு நாள் மட்டும் பாராளுமன்றத்திற்கு வந்து, தமிழக மக்களுக்குத் துரோகம் செய்து விட்டார் என அன்புமணி மீது திமுக எம்பி கனிமொழி குற்றம்சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இன்று தமிழகமெங்கும் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக அதிமுகவினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், சென்னையில் நடந்த போராட்டத்தில் தூத்துக்குடி எம்பி கனிமொழி கலந்து கொண்டார்
 
இந்த போராட்டத்தில் அவர் பேசியபோது ’பாமக எம்பி அன்புமணியை நாங்கள் ஒரு நாள் கூட பாராளுமன்றத்தில் பார்த்ததே கிடையாது. அவர் எப்போதும் தலைமறைவாகவே இருந்து வந்தார். ஆனால் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவின் வாக்கெடுப்பு தினத்தில் மட்டும் தவறாமல் கலந்து கொண்டு அந்த மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்து விட்டு சென்றுவிட்டார். இதன் மூலம் அவர் தமிழக மக்களுக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்துவிட்டார்.
 
அதிமுகவினர் மட்டும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தால், இந்த மசோதா அமலுக்கு வந்திருக்காது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக அளித்ததன் மூலம் தமிழக மக்களுக்கு மட்டுமின்றி இலங்கை மக்களுக்கும் அதிமுக துரோகம் செய்துவிட்டது. இந்த மசோதா காரணமாக உலக நாடுகள் இந்தியாவை அதிர்ச்சியுடன் பார்த்து வருகிறது என்று கனிமொழி ஆவேசமாக பேசினார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments