Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடங்கியது பேராசிரியரின் இறுதி ஊர்வலம் – திமுக தலைவர் பங்கேற்பு !

Webdunia
சனி, 7 மார்ச் 2020 (16:46 IST)
கீழ்ப்பாக்கம் இல்லத்தில் இருந்து பேராசிரியர் க அன்பழகனின் இறுதி ஊர்வலம் சற்று முன்னர் தொடங்கியது.

திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் மூச்சுத்திணறல் காரணமாக கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து கடந்த 12 நாட்களாக அவருக்கு சிகிச்சை அளித்தும் அவர் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாமல் நேற்று இரவு அவர் மறைந்தார்.

தற்போது கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில்  வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழகத்தின் பெரும்பாலான அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்திய நிலையில் அவரது இறுதி ஊர்வலம் சற்று முன்னர் அவரது கீழ்ப்பாக்கம் இல்லத்தில் இருந்து புறப்பட்டது.

அவரது உடல் கீழ்ப்பாக்கம் அருகே உள்ள வேலங்காடு இடுகாட்டில் க.அன்பழகன் உடல் தகனம் செய்யப்பட உள்ளது. இறுதி ஊர்வலத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments