Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினியோடு கை கோர்க்கும் ஆனந்தராஜ் - போயஸ் கார்டனில் சந்திப்பு

Webdunia
சனி, 27 மே 2017 (12:55 IST)
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா? இல்லையா? என்று ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் பேசப்பட்டும், விவாதிக்கப்பட்டும் வருகிறது. 


 

 
கடந்த 19-ம் தேதி ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினி “நாட்டை காப்பாற்ற போருக்கு தயாராக இருங்கள்” என அவர் தனது அரசியல் பிரவேசம் பற்றி சூசகமாக பேசினார். இதனால் அவர் விரைவில் அரசியலுக்கு வருவார் என பலரும் எதிர்பார்க்கின்றனர்.

 
வருகிற ஜூலை மாதம் தனது அரசியல் பிரவேசம் பற்றிய அறிவிப்புகளை ரஜினிகாந்த் வெளியிடுவார் என அவரது சகோதரர் சத்யநாரயணா உறுதி செய்துள்ளார். மேலும், தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து தனக்கு நெருக்கமான பல பத்திரிக்கையாளர்களை ரஜினிகாந்த் சந்தித்து ஆலோசனை செய்து வருகிறார்.
 
இந்நிலையில், அதிமுகவிலிருந்து விலகியிருக்கும் நடிகர் ஆனந்தராஜ் இன்று காலை சென்னை போயஸ்தோட்டத்தில் உள்ள ரஜினியின் வீட்டில் அவரை சந்தித்து பேசியுள்ளார். இதிலிருந்து, ரஜினி கட்சி தொடங்கினால் அவரோடு ஆனந்த்ராஜ் இணைந்து செயலாற்றுவார் எனத் தெரிகிறது. 
 
ஜெ.வின் மறைவிற்கு பின் சசிகலா தலைமையில் அதிமுக செல்வதை விரும்பாமல், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர் ஆனந்தராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments