Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உள்ளாட்சி தேர்தலில் வென்ற மூதாட்டி! மதுரையில் ஆச்சர்யம்!

Webdunia
வியாழன், 2 ஜனவரி 2020 (17:42 IST)
தமிழக ஊராட்சி அமைப்புகளுக்கான உள்ளாட்சி தேர்தலில் மூதாட்டி ஒருவர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. இதற்கான வாக்குகளை எண்ணும் பணிகள் இன்று நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரை மாவட்டம் மேலூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அரிட்டாப்பட்டியில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 79 வயது மூதாட்டி வீரம்மாள் போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கையில் எதிர் வேட்பாளரைவிட 195 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ள வீரம்மாள் ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் ஊராட்சி தலைவர் பதவி வகிப்பவர்களில் மிகவும் அதிக வயது கொண்ட நபராக வீரம்மாள் இருப்பார் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவின் மதுரை மாநாடு.. பிரமாண்டமான ஏற்பாடுகள்.. 4 மணி நேர அரசியல் புயல்..!

திடீரென ஏர்டெல் நெட்வொர்க்கில் ஏற்பட்ட சிக்கல்: வாடிக்கையாளர்கள் அவதி

விபத்தில் இறந்த நபரின் பிணத்தை தள்ளுவண்டியில் எடுத்து சென்ற காவல்துறை அதிகாரி: அதிர்ச்சி சம்பவம்

ஒருமுறை ரீசார்ஜ் செய்து 46 மணிநேரம் பேசலாம்: இந்தியாவில் அறிமுகமாகும் Honor X7c 5G ஸ்மார்ட்போன்

ஓபிஎஸ்ஸை சந்தித்தேன்.. ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வருவோம்: சசிகலா

அடுத்த கட்டுரையில்
Show comments