Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திற்பரப்பு அருவியில் குளிக்க மீண்டும் அனுமதி...! 4 நாட்களுக்கு பிறகு அனுமதி வழங்கியது மாவட்ட நிர்வாகம்...!!

Webdunia
வியாழன், 21 டிசம்பர் 2023 (10:09 IST)
திருப்பரப்பு அருவியில் 4 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது


 
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு கனமழை பெய்து வந்ததை தொடர்ந்து பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார் போன்ற அணைகளில் நீர் வரத்து அதிகரித்து அபாய அளவை தாண்டியதால் இந்த மூன்று அணைகளில் இருந்து வினாடிக்கு 11 ஆயிரத்திற்கும் அதிகமாக உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு திற்பரப்பு அருவியல் தண்ணீர் ஆர்ப்பரித்து அருவியே வெளியே தெரியாத அளவுக்கு ஆக்கிரோஷமாக தண்ணீர் பாய்ந்து சென்றது.

இந்நிலையில் கடந்த  ஞாயிற்று கிழமை ( டிசம்பர் 17 ) முதல் திற்பரப்பு அருவியில்  சுற்றுலா பயணிகளின்  பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. தற்போது மழை முற்றிலும் குறைந்தது. இதனால் அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றம் குறைக்கப்பட்ட நிலையில் அருவிக்கு வரும் தண்ணீர் வரத்து சீரானது. இதையடுத்து நான்கு நாட்களுக்கு பிறகு  தற்போது  சுற்றுலா  பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். மழை மற்றும் தொடர்ந்து அருவிக்கு தடை விதித்து இருந்ததால் காலையில் சுற்றுலா  பயணிகள் வருகை மிக குறைவாக காணப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments