Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திப்பு சுல்தான் பிறந்தநாளை கொண்டாட அனுமதிக்க வேண்டும் - நீதிமன்றத்தில் மனு

Webdunia
செவ்வாய், 17 நவம்பர் 2015 (20:37 IST)
திப்பு சுல்தான் பிறந்தநாளை கொண்டாட அனுமதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 

 
இது தொடர்பாக தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாநில பொதுச்செயலாளர் இஸ்மாயில் தாக்கல் செய்துள்ள மனுவில், ”ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக தீரமாக போரிட்டு, மறைந்தவர் திப்பு சுல்தான்.
 
பொதுவாக முஸ்லிம் மதத்தில் பிறந்தநாள் கொண்டாடுவதில்லை. இந்து மற்றும் கிறிஸ்துவ மதங்களில்தான் பிறந்தநாள் கொண்டாடுவது வழக்கம்.
 
ஆனால், எங்களது கட்சி, மதசார்பற்ற கட்சி என்பதால், திப்பு சுல்தானின் பிறந்தநாளை கொண்டாட முடிவு செய்தோம். இதற்காக குடியாத்தம், ஆலிகர் தெருவில் திப்பு சுல்தான் பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்தோம்.
 
இந்த ஆலிகர் தெருவில்தான், அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் பொதுக்கூட்டம் நடத்துகிறது. இந்த பொதுக்கூட்டத்துக்கு அனுமதிக் கேட்டு குடியாத்தம் காவல் நிலையத்தினரிடம் கோரிக்கை மனுவை கொடுத்தேன்.
 
ஆனால், எங்களுக்கு பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்க மறுத்து குடியாத்தம் போலீசார் கடந்த 13ஆம் தேதி உத்தரவிட்டுள்ளனர்.
 
எனவே, எங்களுக்கு பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்க போலீசாருக்கு உத்தரவிடவேண்டும். இதற்காக காவல் துறையினர் விதிக்கும் எந்த ஒரு நிபந்தனைகளையும் ஏற்க நாங்கள் தயாராக உள்ளோம்” என்று கூறப்பட்டுள்ளது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments