Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ்மாக்குகளை மூட உத்தரவு

Webdunia
செவ்வாய், 7 ஆகஸ்ட் 2018 (17:05 IST)
தமிழகத்தில் உள்ள  டாஸ்மாக் கடைகளையும் மாலை 6 மணிக்கு மூடும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த 10 நாட்களுக்கு மேலாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. 4 நாட்களுக்கு பிறகு நேற்று வெளியான மருத்துவ அறிக்கையில் கருணாநிதியின் உடல்நிலையில் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 
 
அடுத்த 24 மணி நேரம் கழித்துதான் எதுவாக இருந்தாலும் தெளிவாக கூறமுடியும் என்று தெரிவிக்கப்பட்டது.  சற்று நேரத்திற்கு முன்னர் 5 மணிக்கு மருத்துவ அறிக்கை வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது.
 
தற்பொழுது மருத்துவ அறிக்கை வெளியானது. அதில், கருணாநிதியின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. முக்கிய உறுப்புகள் அனைத்தும் மிகவும் மோசமடைந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மாலை 6 மணிக்கே மூடும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments