Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாணவர்கள் எத்தனை மார்க் எடுத்திருந்தாலும் பாஸ்தான்! – தேர்வுத்துறை அதிரடி!

Webdunia
வெள்ளி, 19 ஜூன் 2020 (13:40 IST)
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி அளிக்க முதல்வர் உத்தரவிட்ட நிலையில், மாணவர்கள் எத்தனை மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும் தேர்ச்சி அளிக்க தேர்வுத்துறை ஆணை பிறப்பித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பை கருத்தில் கொண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மாணவர்கள் அனைவருக்கு தேர்வின்றி தேர்ச்சி வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் 80 சதவீத மதிப்பெண்களும், வருகைப்பதிவின் அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்களும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பல பள்ளிகளிடம் விடைத்தாள்கள் இல்லையென்றும், பல மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் தேர்ச்சி அடையவில்லை என்றும், மேலும் பலர் தேர்வுக்கே வரவில்லை என்றும் பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளன. இந்த மாணவர்களுக்கு எதன் அடிப்படையில் மதிப்பெண் அளிப்பது என ஆசிரியர்கள் குழம்பியுள்ளனர். இந்நிலையில் புதிய் ஆணை பிறப்பித்துள்ள அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தேர்வுத்துறை ஆணையர் பழனிசாமி காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் எத்தனை மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் தேர்ச்சி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவுரவ விரிவுரையாளர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்ப்பதா? அன்புமணி கண்டனம்..!

டிரம்ப் மனமாற்றத்தால் 1471 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் குஷி..!

25 கோடி ஏழைகளை பணக்காரர்களாக்கியுள்ளோம்! பாஜகவின் சாதனைகள் என்ன? - பட்டியலிட்ட பிரதமர் மோடி!

ஜனாதிபதி மாளிகையில் சி.ஆர்.பி.எப் வீராங்கனைக்கு திருமணம்.. வரலாற்றில் முதல் முறை..!

24 மணிநேரத்தில் அரசியல் சாசனப்படி முடிவெடுக்க வேண்டும்: ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்..

அடுத்த கட்டுரையில்
Show comments