Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் ரத்தாகும் விமான சேவைகள்! – கடுப்பான பயணிகள்!

Webdunia
திங்கள், 25 மே 2020 (10:32 IST)
நீண்ட நாட்கள் கழித்து விமான சேவை தொடங்கப்பட்ட நிலையில் பயணிகள் அதிகமில்லாததால் விமான சேவைகள் சில ரத்து செய்யப்படுவது முன்பதிவு செய்தவர்களை அவதிக்குள்ளாக்கியுள்ளது.

நாடு முழுவதும் கொரோன தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கடந்த மார்ச் மாதம் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் நீண்ட நாட்கள் கழித்து இன்று முதல் உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கின. தமிழகத்தில் ஜூன் மாதம் முதல் விமான சேவையை தொடங்குமாறு தமிழக முதல்வர் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினார். எனினும் இன்று முதல் விமான சேவைகள் தொடங்கப்பட்ட நிலையில் பயணிகளுக்கு நிபந்தனைகள் சிலவற்றை தமிழக அரசு விதித்துள்ளது.

இந்நிலையில் பல்வேறு வழித்தடங்களில் செயல்படும் விமானங்களில் குறைவான பயணிகளே முன்பதிவு செய்திருப்பதாக தெரிகிறது. அவ்வாறாக குறைவான பயணிகள் உள்ள விமானங்கள் இயக்கப்படாததால் பயணிகள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். ரத்து செய்யப்பட்ட விமானங்களுக்கு புக்கிங் செய்தவர்கள் அந்த பணமும் உடனடியாக கிடைக்க வழியில்லை என்று புலம்பி வருகின்றனர்.

இன்று இந்தியா முழுவதும் விமான சேவைகள் தொடங்கப்பட்ட நிலையில் தூத்துக்குடியிலிருந்து சென்னை செல்வதற்கான விமானத்தில் 38 பேர் முன்பதிவு செய்திருந்தனர். ஆனால் அந்த விமான பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதுபோலவே திருச்சியிலிருந்து சென்னைக்கு இயக்க இருந்த உள்ளூர் விமான சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்கொடுமை ஆகக்கூடாதுனா வெளிய வராதீங்க! - அகமதாபாத்தில் சர்ச்சை போஸ்டர்கள்!

மாடுகளுக்கு போராட தெரியவில்லை.. கூரிய கொம்புகள் இருப்பதை மறந்துவிட்டன: சீமான்

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை.. குடையுடன் வெளியே போங்க..!

கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தம் அளிக்கிறது: டிடிவி தினகரன்

கலாச்சாரத்தை சீரழிக்கும் நைட் டான்ஸ் பார்கள்? துவம்சம் செய்த நவநிர்மான் சேனாவினர்!

அடுத்த கட்டுரையில்
Show comments