Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கரை ஒதுங்கியது எம்.எச்.370 விமானத்தின் பாகம் - ஆய்வில் உறுதி!

Webdunia
வெள்ளி, 16 செப்டம்பர் 2016 (05:59 IST)
மலேசியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தை சேர்ந்த எம்.எச்.370 விமானம், கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி, மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங் நகருக்கு 239 பயணிகளுடன் புறப்பட்டு சென்றபோது நடுவானில் திடீரென மாயமானது. 


 
 
விமானத்தை தேடும் பணி இந்திய பெருங்கடல் பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. எனினும் விமான தேடுதல் வேட்டையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்நிலையில், மாயமான விமானத்தின் பெரிய அளவிலான உதிரி பாகம் கடந்த ஜூன் மாதம் கிழக்கு ஆப்பிரிக்காவின் தான்சினியா நாட்டில் உள்ள பெம்பா தீவில் கண்டெடுக்கப்பட்டது.

பின் அது ஆய்விற்காக ஆஸ்திரேலியாவிற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில், தான்சானியாவில் கண்டெடுக்கப்பட்டது எம்.எச்.370 விமானத்தின் பாகம் தான் என்பதை ஆய்வின் முடிவில் மலேசியா உறுதி செய்துள்ளது. மேலும், அதில் பயணித்த 227 பயணிகளும், 12 சிப்பந்திகளும் மரணமடைந்துவிட்டதாக மலேசியா அரசு தெரிவித்துள்ளது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments