Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.1,258 கோடி மதிப்பீட்டில் மதுரையில் எய்ம்ஸ்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Webdunia
திங்கள், 17 டிசம்பர் 2018 (20:29 IST)
டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை போல் தமிழகத்தில் உள்ள மதுரையிலும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்றும், அது தமிழகத்திற்கு மட்டுமின்றி தென்னிந்தியாவிற்கே பயனுள்ளதாக இருக்கும் என்றும் மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவித்தது.

ஆனாலும் தகவல் அறியும் சட்டத்தின் மூலம் இன்னும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை என்ற தகவலால் மதுரை மக்கள் தங்கள் நகரத்தில் எய்ம்ஸ் வருமா? வராதா? என்ற சந்தேகத்துடன் இருந்தனர்.

இந்த நிலையில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது டுவிட்டரில் மதுரை தோப்பூரில் ரூ.1,258 கோடி மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக  தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால் மதுரையில் எய்ம்ஸ் வருவது உறுதியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments