Webdunia - Bharat's app for daily news and videos

Install App

"எல்லாமே சசிகலாவின் பின்னணி தான்" - செங்கோட்டையன் அதிரடி

Webdunia
செவ்வாய், 28 பிப்ரவரி 2017 (11:28 IST)
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் பின்னணியில் தான் கட்சியை வழிநடத்தி செல்கிறோம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.


 

இது குறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடத்தில் கூறியுள்ள செங்கோட்டையன், ”ஹைட்ரோ கார்பன் திட்ட பிரச்சனை குறித்து பிரதமர் மோடியை சந்தித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எங்கும் எதிர்ப்பில்லை. சட்டசபையை பொறுத்தவரை பெரும்பான்மையை நிரூபித்துள்ளோம். அவர்கள் எல்லோரும் சேர்ந்தாலும் கூட 108 பேர் தான். எங்களிடம் பலம் அதிகம். இரட்டை இலை சின்னம் பெரும்பான்மை உள்ளவர்களுக்கு தான்.

அதிமுக எப்போதும் போல் வலிமையுடன் இருக்கிறது. அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவின் பின்னணியில் தான் கட்சியை வழிநடத்தி செல்கிறோம். அதைபோல் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சிறப்பான முறையில் ஆட்சி நடத்தி வருகிறார்.

ஜெயலலிதாவின் உருவப்படத்தை வைக்க கூடாது என்று ஸ்டாலின் கூறுவது சரியல்ல. அவருக்கு தகுதியும் அல்ல. ஜெயலலிதாவினால்தான் இந்த ஆட்சி நடைபெற்று கொண்டு இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிக்க முயற்சி.! திருச்சியில் பிரபல ரவுடியை சுட்டுப்பிடித்த காவல்துறை.!!

லெபனான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 100-க்கும் மேற்பட்டோர் பலி..!!

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்.? உயர்நீதிமன்றம் கேள்வி.!

திருப்பதி லட்டு விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை - தமிழக பாஜக வலியுறுத்தல்..!!

நர்சிங் மாணவி கடத்தப்பட்டு கூட்டு பாலியல் பலாத்காரம்.! விசாரணையில் அதிர்ச்சி தகவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments