Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆம்புலன்ஸ்சிற்கு வழி விடாமல் பொதுக்கூட்டம் நடத்திய அதிமுக அமைச்சர்

Webdunia
புதன், 2 மே 2018 (10:06 IST)
அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா ஆம்புலன்ஸ்சிற்கு வழி விடாமல் பொதுக்கூட்டம் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று உழைப்பாளர்கள் தினம் என்பதால் அதிமுக சார்பில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி செக்காணூரணியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. விழா ஒருங்கிணைப்பாளர்கள், தேசிய நெடுஞ்சாலையை மறித்து மேடை அமைத்தனர். வருவாத்துறை அமைச்சர் ஆர்.பி.உதய்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் ராஜன் செல்லப்பா, மக்கள் கூடுவதற்காகத் தான் தைரியமாக நெடுஞ்சாலையில் மேடை போட்டுள்ளோம் என்றார்.
அவர் இப்படி பேசிக் கொண்டிருக்கும் போதே, அவ்வழியாக வந்த ஆம்புலன்ஸ் வழி இல்லாமல் தவித்தது. பின் மாற்றுப்பாதையில் சுற்றி சென்றது. அமைச்சர்களே இப்படி மக்களுக்கு இடையூறு செய்யும் விதமாக நடந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்
Show comments