Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக - பாஜக இடையே நட்பு எதுவும் கிடையாது - முரளிதர் ராவ்

Webdunia
சனி, 25 ஏப்ரல் 2015 (09:26 IST)
அதிமுக-பாஜக இடையே நட்பு எதுவும் கிடையாது என்று பாஜக தேசிய பொது செயலாளர் முரளிதர் ராவ் கூறியுள்ளார்.
 
பாஜக தேசிய பொது செயலாளர் முரளிதர் ராவ், சென்னை தியாகராயநகரில் உள்ள பாஜக மாநில தலைமையகமான கமலாலயத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
 
அப்போது முரளிதர்ராவ் கூறியதாவது:-
 
தமிழக மீனவர்கள் பிரச்சினையை பாஜக உன்னிப்பாக கவனித்து வருகிறது. மீனவர்கள் கொல்லப்படுவதை தடுக்கவும், கைது செய்யப்பட்ட மீனவர்களையும், கைப்பற்றப்பட்ட படகுகளையும் விடுவிக்கவும் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
 
விரைவில், தமிழக மீனவர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். தமிழக மீனவர் பிரச்சினை தொடர்பாக, தமிழக பாஜக சார்பில் டெல்லியில் 27 ஆம் தேதி கருத்தரங்கம் ஒன்று நடைபெறுகிறது. இதில், தமிழக மீனவ பிரதிநிதிகள் பங்கேற்று தங்களது கருத்துக்களை தெரிவிக்க உள்ளனர்.
 
இறுதியில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து, 29 ஆம் தேதி மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜை மீனவ பிரதிநிதிகள் சந்தித்து தெரிவிப்பார்கள். இவ்வாறு முரளிதர்ராவ் கூறினார்.  பின்னர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு முரளிதர் ராவ் பதிலளித்தார். 
 
கேள்வி:- ஆந்திராவில் 20 தமிழக தொழிலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து? 
 
பதில்:- அந்த சம்பவத்திற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆந்திர காவல்துறையினர் தற்காப்புக்காக கொலை செய்ததாக கூறுவது நம்பும்படியாக இல்லை. உண்மையான குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டதாக நாங்கள் நினைக்கவில்லை. இந்த விஷயத்தில் ஆந்திர அரசு தெளிவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.
 
கேள்வி:- மேகதாது குறுக்கே அணை கட்ட கர்நாடக அரசு முயன்று வருகிறதே? 
 
பதில்:- மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் எந்த அனுமதியும் பெறவில்லை. இது தொடர்பாக, தமிழக விவசாயிகள் கொண்டுள்ள கவலையில் நியாயம் உள்ளது. பாஜக சரியான நிலைப்பாட்டை எடுக்கும். 
 
கேள்வி:- நிலம் கையகப்படுத்தும் மசோதாவை பாஜக வில் உள்ள கூட்டணி கட்சிகளே எதிர்த்த நிலையில் அதிமுக ஆதரித்துள்ளதே?
 
பதில்:- அதில் உள்ள நன்மை கருதி அதிமுக ஆதரித்தது. பாஜக கூட்டணியில் உள்ள சிவசேனா உள்ளிட்ட கட்சிகளே எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதிமுக ஆதரித்தது. இருந்தாலும், அதிமுக - பாஜக இடையே நட்பு எதுவும் கிடையாது. எங்கள் கூட்டணியிலும் அவர்கள் இல்லை. இவ்வாறு முரளிதர் ராவ் கூறினார்.

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

மத்திய அமைச்சர் ஆகிறாரா சௌமியா அன்புமணி.. 2026ல் வேற ஒரு கணக்கு..!

நெல் கொள்முதல் அளவு குறைந்தது ஏன்.? ஆய்வு செய்ய அரசுக்கு அன்புமணி கோரிக்கை..!!

கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்.! திருச்செந்தூர் கடலில் குளிக்க தடை.!

Show comments