Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூட்டணி குறித்து யாரும் எந்த கருத்தும் சொல்லக்கூடாது: நயினார் நாகேந்திரன் உத்தரவு..!

Siva
வெள்ளி, 18 ஏப்ரல் 2025 (14:23 IST)
அதிமுக-பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கூட்டணி குறித்து கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எந்த கருத்தும் சொல்ல வேண்டாம் என்றும், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
 
விழுப்புரத்தில் நடைபெற்ற பாஜக தொண்டர்கள் சந்திப்பு கூட்டத்தில் இன்று அவர் பேசிய போது, 'அதிமுக-பாஜக கூட்டணி தற்போது நடந்துள்ளது. ஆன்மீகத்துக்கு எதிரான திமுக ஆட்சியை அகற்றுவது மட்டுமே நமது நோக்கமாக இருக்க வேண்டும். கூட்டணி குறித்து கட்சி தலைமை மட்டுமே முடிவு செய்யும். எனவே, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கூட்டணி குறித்து எதையும் வெளியில் சொல்ல வேண்டாம்,' என்று தெரிவித்துள்ளார்.
 
அதேபோல், 'சமூக வலைதளங்களிலும் கூட்டணி குறித்து தொண்டர்கள் எந்த பதிவையும் செய்ய வேண்டாம். தொலைக்காட்சி விவாதங்களிலும் கூட்டணி குறித்து பேச வேண்டாம்,' என்றும் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தினார்.
 
ஏற்கனவே நேற்று, கூட்டணி குறித்து அதிமுக நிர்வாகிகள் பேச வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி கூறிய நிலையில், இன்று அதே கருத்தை நயினார் நாகேந்திரன் அவர்களும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமனாரை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த மருமகள்.. சந்தேகம் வராமல் இருக்க உடல் முழுவதும் மஞ்சள் பூச்சு..!

நாளை கூடுகிறது பாராளுமன்றம்.. டிரம்ப், வங்கமொழி மக்கள் வெளியேற்றம்.. பீகார் தேர்தல் பிரச்சனையை எழும்புமா?

இன்று முதல் 3 நாட்களுக்கு செம மழை! எந்தெந்த பகுதிகளில்..? - வானிலை ஆய்வு மையம்!

50 ஆண்டுகளுக்கு பிறகு சீரமைக்கப்பட்ட வள்ளி குகை.. திருச்செந்தூர் பக்தர்கள் மகிழ்ச்சி..!

ஊட்டியில் இன்றும் நாளையும் சுற்றுலா தலங்கள் மூடல்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments