அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு !

Webdunia
சனி, 27 பிப்ரவரி 2021 (18:53 IST)
அதிமுக –பாமக இடையே தேர்தல் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளாது. ஒப்பந்தப்படி பாமகவிற்கு 23 தொகுதிகள்  ஒதுக்கப்பட்டுள்ளது

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம்தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மே 2 ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதனால் தமிழக அரசியல்களம் சூடுபிடித்துள்ளது.திராவிட கட்சிகள் மற்ற கட்சிகளுடன் கூட்டணி குறித்தும் தொகுதிப் பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.

இன்று காலைமுதல் அதிமுக கட்சியுடன் ராமதாஸ் தலைமையிலான பாமக கட்சி கூட்டணி குறித்துப் பேச்சு வார்த்தை சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.

இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்க அதிமுக ஒப்புக்கொண்டுள்ளது. இதுகுறித்த ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகியுள்ளது.

 
பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி கூறியுள்ளதாவது :

அதிமுக –பாமக இடையே தேர்தல் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளாது. ஒப்பந்தப்படி பாமகவிற்கு 23 தொகுதிகள்  ஒதுக்கப்பட்டுள்ளது. வன்னியர்களுக்கு தனி இட  ஒதுக்கீடு பெறப்பட்டதற்காக தொகுதி எண்ணிக்கையை நாங்கள் குறைத்துப் பெற்றுள்ளோம். ஆனாலும் எங்களின் பலம்  குறையாது என அன்புமணி ராதமாஸ் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments