Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவையில் ஏ.ஐ.,க்கான தொழில்நுட்ப பூங்கா: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

Mahendran
வியாழன், 9 ஜனவரி 2025 (11:51 IST)
கோவையில் ஏ.ஐ.,க்கான தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்பட உள்ளதாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
சென்னை நந்தம்பாக்கத்தில் நடந்த umagine tn தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியபோது தமிழகத்தின் நிலையான எதிர்காலத்துக்கு வழிவகை அளிக்கும் மாநாடு தான் இது என்றும் வணிகத்தையும் தொழில்நுட்பத்தையும் ஊக்குவிப்பதில் தமிழகம் முன்னோடியாக உள்ளது என்றும் தெரிவித்தார்.
 
மூன்றாவது முன்னணி தகவல் தொழில்நுட்ப மாநாட்டில் பங்கேற்றது மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறிய முதல்வர் ஸ்டாலின் 2000-க்கும் மேற்பட்ட  தொழில் முனைவோர்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்தார்.
 
ஏஐ தொழில்நுட்பத்தால்  வேலைவாய்ப்பு பெருகும் என்றும் கோவையில் ஏஐ தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்பட உள்ளதாகவும் சைபர் பாதுகாப்புக்கு அரசு முக்கியத்துவம் அளித்து வருவது என்றும் அவர் கூறினார்.
 
சிறிய நகரங்களில் எல்காட் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் என்றும் வளர்ச்சி என்பது நகரத்தில் மட்டுமில்லாமல் சமச்சீராக, மாநிலம் முழுவதும் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். ஆட்சிக்கு வந்தது முதல் இந்த வளர்ச்சி போதும் என்று நான் நினைத்ததே இல்லை என்றும் தமிழகத்திற்கு இன்னும் வளர்ச்சி வேண்டும் என்று இந்த அரசு செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாகா எல்லையில் பாகிஸ்தான் ராணுவ வீரர்களுடன் கைகுலுக்க கூடாது: மத்திய அரசு..!

அதானி மீதான ஹிண்டன்பர்க் அறிக்கைக்கும் ராகுல் காந்திக்கும் தொடர்பா? அதிர்ச்சி தகவல்..!

பாகிஸ்தானியர்களை தாக்கினால் இந்தியர்களை சும்மா விட மாட்டோம்..! - பாகிஸ்தான் அமைச்சர் மிரட்டல்!

பாகிஸ்தான் சூப்பர்லீக்கில் பணிபுரியும் இந்தியர்கள் வெளியேற்றம்: போர் பதற்றம்..!

ஜனாதிபதியுடன் அமித்ஷா, ஜெய்சங்கர் அவசர சந்திப்பு.. அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments