Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் சம்பள பாக்கி தராததால் வயதான தம்பதியினர் அடித்துக் கொலை

Webdunia
புதன், 18 ஏப்ரல் 2018 (11:16 IST)
சென்னையில் சம்பள பாக்கி தராததால் வயதான தம்பதியினர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கொட்டிவாக்கம் ராமலிங்கபுத்தை சேர்ந்தவர் மாயாண்டி. இவரது மனைவி வள்ளிநாயகி. தம்பதியினரின் இரு மகன்களும் வெளிநாட்டில் வேலை செய்து வருகின்றனர். இவர்களது வீட்டிற்கு டைல்ஸ் ஒட்ட வடமாநில இளைஞரான ஆலனை அணுகியுள்ளனர். மாயாண்டி அவருக்கு முன்பணம் அளித்துள்ளார். இதனையடுத்து அவர்கள் வீட்டிற்கு டைல்ஸ் ஒட்டியுள்ளார் ஆலன்.
 
வேலை முழுமையாக முடிந்த பிறகு ஆலன், மீதிப்பணத்தை மாயாண்டியிடம் கேட்டுள்ளார். ஆனால் மாயாண்டி ஆலனிடம், நீ ஒழுங்காகவே டைல்ஸை ஒட்டவில்லை, ஆதலால் உனக்கு பணம் தர முடியாது என கூறியுள்ளார். பல முறை கேட்டும் மாயாண்டி ஆலனுக்கு பணம் தரவில்லை.
 
இதனால் ஆத்திரமடைந்த ஆலன் அவனது கூட்டாளியோடு மாயாண்டியின் வீட்டிற்கு சென்று மாயாண்டியையும் அவரது மனைவியையும் கொன்று விட்டு, வீட்டிலிருந்த 13 பவுன் நகைகளை திருடிக்கொண்டு தப்பியோடியுள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதனையடுத்து சிசிடிவி கேமரா மூலம் விசாரணை நடத்திய போலீஸார் ஆலனை கைது செய்தனர். மேலும் அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments