சும்மா சொன்னதையே சொல்லிட்டு இருக்காங்க! – தொடரும் திமுகவின் வெளிநடப்பு படலம்!

Webdunia
புதன், 11 மார்ச் 2020 (13:01 IST)
தமிழக சட்டசபை கூட்டம் தொடங்கிய நிலையில் என்.பி.ஆர்-க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றாததை கண்டித்து திமுக வெளிநடப்பு செய்தது.

நேற்று முன்தினமே தொடங்கியிருக்க வேண்டிய சட்டசபை கூட்டம் எதிர்கட்சி பிரமுகர்கள் இறப்புக்கு அஞ்சலி செலுத்திய பின் ஒத்திவைக்கப்பட்டு இன்று தொடங்கியது. தொடர்ந்து சிஏஏ, என்.பி.ஆர் போன்றவற்றிற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்ற சொல்லி சட்டசபையில் கேட்டு வரும் திமுக இன்றும் அதையே வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தது.

வெளிநடப்பிற்கான காரணம் குறித்து பேசிய மு.க.ஸ்டாலின் ”என்.பி.ஆர்-க்கு ஏதிராக இந்தியா முழுவதும் 13 மாநிலங்களில் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்திலும் என்பிஆர்-க்கு எதிரான தீர்மானம் இயற்ற கோரிக்கை வைத்தோம். ஆனால் அவர்கள் என்னென்ன தவறான தகவல்களை தந்தார்களோ அதையே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ.க்கு உளவு பார்த்த வழக்கறிஞர்: 41 லட்சம் ரூபாய் கைமாறியது அம்பலம்!

சன்னி லியோன் போஸ்டரை வயலில் ஒட்டிய விவசாயி! 'தீய சக்திகள்' நெருங்காமல் இருக்க என விளக்கம்..!

"துரியோதனன் தவறான அணியில் சேர்ந்தது" போன்றது: செங்கோட்டையன் குறித்து நயினார் நாகேந்திரன்..!

நாடாளுமன்றத்திற்கு நாயுடன் வந்த காங்கிரஸ் எம்பி.. கேள்வி கேட்ட செய்தியாளர்களிடம் 'பவ் பவ்' என கிண்டல்!

பிரதமர் மோடி டீ விற்பது போன்ற AI கேலி வீடியோ.. காங்கிரஸ் கட்சிக்கு பாஜக கடும் கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments