Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விழுப்புரத்தை அடுத்து கரூரிலும் கோயிலுக்கு சீல் வைப்பு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

Webdunia
வெள்ளி, 9 ஜூன் 2023 (11:01 IST)
விழுப்புரம் அருகே மேல்பாதி என்ற பகுதியில் திரௌபதி அம்மன் கோவில் சமீபத்தில் சீல் வைக்கப்பட்ட நிலையில் தற்போது கரூர் அருகே ஒரு கோயிலும் சீல் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வீரணம்பட்டி காளியம்மன் கோவில் திருவிழாவில் பட்டியலில் இளைஞரை கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுத்ததால் கோயிலை பூட்டி வருவாய் துறையின் சீல் வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
 
இது குறித்து சமாதான பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாகவும் ஆனால் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாததால் கோட்டாட்சியர் தலைமையில் கோயிலுக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
ஏற்கனவே விழுப்புரம் அருகே திரெளபதி அம்மன் கோயில் சீல் வைக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒரு கோவில் சீல் வைக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றுக்குள் 80,000 வந்துவிடுமா சென்செக்ஸ்.. மீண்டும் உச்சம் செல்லும் பங்குச்சந்தை..!

மணிப்பூர் மக்களின் கோபத்தின் அடையாளமான நிற்கிறேன்! பதில் சொல்லுங்க!? - நாடாளுமன்றத்தை தெறிக்கவிட்ட கல்லூரி பேராசிரியர்!

தங்கம் விலை இன்று ஏற்றமா? சரிவா? சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

மதமாற்றத்தை அனுமதித்தால் பெரும்பான்மையினர் சிறுபான்மையினராக மாறி விடுவார்கள்: அலகாபாத் உயர்நீதிமன்றம்

நீட் தேர்வுக்கு எதிராக பரபரப்பு பேச்சு.. கல்வி விழாவில் விஜய் பேச்சுக்கு குவியும் பாராட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments