Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விழுப்புரத்தை அடுத்து கரூரிலும் கோயிலுக்கு சீல் வைப்பு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

Webdunia
வெள்ளி, 9 ஜூன் 2023 (11:01 IST)
விழுப்புரம் அருகே மேல்பாதி என்ற பகுதியில் திரௌபதி அம்மன் கோவில் சமீபத்தில் சீல் வைக்கப்பட்ட நிலையில் தற்போது கரூர் அருகே ஒரு கோயிலும் சீல் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வீரணம்பட்டி காளியம்மன் கோவில் திருவிழாவில் பட்டியலில் இளைஞரை கோயிலுக்குள் நுழைய விடாமல் தடுத்ததால் கோயிலை பூட்டி வருவாய் துறையின் சீல் வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
 
இது குறித்து சமாதான பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாகவும் ஆனால் பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாததால் கோட்டாட்சியர் தலைமையில் கோயிலுக்கு சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
ஏற்கனவே விழுப்புரம் அருகே திரெளபதி அம்மன் கோயில் சீல் வைக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஒரு கோவில் சீல் வைக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

லண்டன் செல்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.. முக்கிய வர்த்தக பேச்சுவார்த்தை..!

ஏப்ரல் 6ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்..!

தமிழகத்தில் மீண்டும் ஒரு என்கவுண்டர்.. மதுரையில் பிரபல ரவுடி சுட்டுக்கொலை..!

அதிமுகவை கைப்பற்ற ஆபரேசன் தாமரை? செங்கோட்டையன் சொல்வது என்ன?

இன்று முதல் 45 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு.. ரூ.75ல் இருந்து ரூ.110 கட்டணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments