Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலுமணியை அடுத்து ஜெயகுமார் வீட்டில் ரெய்டு: அமைச்சர் நாசர்

Webdunia
வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (08:20 IST)
முன்னாள் அமைச்சர் வேலுமணி வீடுகளில் மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களிலும் அவருடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வசிக்கும் இடங்களிலும் அதிரடியாக சமீபத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தினர் 
 
இந்த சோதனையில் பல்வேறு ஆதாரங்கள் சிக்கியதாகவும் இதனை அடுத்து வேலுமணி உள்பட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்தன
 
இந்த சோதனை அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தற்போது வேலுமணியை அடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வீட்டிலும் சோதனை செய்யப்படும் என அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார் 
 
குற்றச்சாட்டுகளின் அடிப்படையில்தான் சோதனை செய்யப்படுகிறது என்றும் பழிவாங்கும் நடவடிக்கை இல்லை என்றும் தவறு செய்யவில்லை என்றால் அவர்கள் தங்களது நேர்மையை நிரூபித்து காட்டலாம் என்றும் அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். மேலும் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் பலர் வீட்டில் ரெய்டு செய்யப்படும் என்று வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராணுவ வீரர்களின் தனிப்பட்ட தகவல்களை வெளியிட கூடாது: ஊடகங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடு..!

என் பிள்ளைகள் மோடியின் ரசிகர்கள்.. அமெரிக்காவின் 2வது லேடி உஷா வான்ஸ் பேட்டி..!

நேற்றைய சரிவுக்கு பின் இன்று மீண்டும் உயர்ந்த பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

3 நாட்களாக தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை.. சென்னையில் இன்றைய நிலவரம் என்ன?

ஜாக்டோ-ஜியோ சார்பில் போராட்டம் நடத்தலாம்.. தடை கோரிய வழக்கு தள்ளுபடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments