Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த பின் கமலாலயம் வந்த தமிழிசை: உற்சாக வரவேற்பு..!

Mahendran
புதன், 20 மார்ச் 2024 (11:46 IST)
தெலுங்கானா மற்றும் புதுவை மாநில கவர்னராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் இன்று அவர் சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயம்  வந்த நிலையில் அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கடந்த சில ஆண்டுகளாக தெலுங்கானா மற்றும் புதுவை மாநில கவர்னராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக அவர் ராஜினாமா செய்ததாக கூறப்பட்ட நிலையில் அவர் திருநெல்வேலி அல்லது   நாகர்கோவில் தொகுதியில் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கவர்னர் பதவியை ராஜினாமா செய்த பின் முதல் முறையாக தமிழிசை சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு சற்று முன் வருகை தந்தார். அவருக்கு பாஜக பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்த நிலையில் இன்று பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று கூறப்படும் நிலையில் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிடும் தொகுதி குறித்து அறிவிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments