Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடுதலை ஆனதும் முதல்வேலையாக மகள் திருமணம்: நளினி கடிதம்

Webdunia
புதன், 21 நவம்பர் 2018 (08:14 IST)
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வரும் 7 பேர் விடுதலை தற்போது கவர்னரின் கையில் உள்ளது. தமிழக அமைச்சரவை அனுப்பிய 7 பேர் விடுதலை குறித்த தீர்மானத்தில் இன்னும் கவர்னர் முடிவெடுக்காமல் உள்ளார்.

இந்த நிலையில் 7 பேர்களில் ஒருவராகிய நளினி ஊடகம் ஒன்றுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் விரைவில் தங்களுக்கு விடுதலை கிடைக்கும் என நம்புவதாகவும், 7 பேர் விடுதலை விவகாரத்தில், தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு, நன்றி என்றும் கூறியுள்ளார்.

மேலும் விடுதலைக்கு பின் முதல் வேலையாக தனது மகளுக்கு லண்டனில் திருமணத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக நளினி நம்பிக்கையுடன் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் , தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில், அதிமுக நிர்வாகிகள் 3 பேர் விடுதலைக்கு தான் வரவேற்பு தெரிவித்துள்ளதாகவும் நளினி தனது கடிதத்தில் எழுதியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’கிங்டம்’ தமிழர்களுக்கு எதிரான படமா? தயாரிப்பு நிறுவனத்தின் விளக்கம்..!

அரசு திட்டத்தில் முதல்வர் பெயர் போடலாம்.. வழக்கு போட்ட சிவி சண்முகத்திற்கு அபராதம்.. சுப்ரீம் கோர்ட்..!

ரக்‌ஷாபந்தன்: பிரதமர் மோடிக்கு 30 ஆண்டுகளாக ராக்கி கட்டும் பாகிஸ்தான் பெண்!

30 ஆயிரம் கிராமங்களில் இருந்து 50 ஆயிரம் விளையாட்டு வீரர்கள்! - களைகட்டும் ஈஷா கிராமோத்சவம் போட்டிகள்!

சரியாக 9:30 மணிக்கு அலுவலகம் வர வேண்டும்: பள்ளி குழந்தைகளை போல் நடத்தும் கார்ப்பரேட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments