Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவை மேயரை அடுத்து நெல்லை மேயரும் ராஜினாமா.. ஒரே நாளில் 2 மேயர்கள் ராஜினாமாவால் பரபரப்பு..!

Siva
புதன், 3 ஜூலை 2024 (18:34 IST)
சற்று முன்பு கோவை மேயர் கல்பனா ஆனந்த் குமார் ராஜினாமா செய்த நிலையில் தற்போது நெல்லை நகர் சரவணன் என்பவர் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் ஒரே நாளில் இரண்டு மேயர்கள் ராஜினாமா செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு கோவை நேயர் கல்பனா ஆனந்த் குமார் என்பவர் ராஜினாமா செய்ததாகவும் திமுகவினர் மத்தியில் அதிருப்தி இருந்ததால் அவர் ராஜினாமா செய்ததாகவும் கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் நெல்லை மகன் சரவணன் சற்று முன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை அவர் நெல்லை மாநகராட்சி ஆணையருக்கு அனுப்பி வைத்து விட்டதாக கூறப்படுகிறது.
 
தனிப்பட்ட காரணம் மற்றும் குடும்ப சூழல் காரணமாக கோவை மேயர் ராஜினாமா செய்ததாக கூறப்பட்ட நிலையில் அதே காரணம் தான் தற்போது நெல்லை மேயருக்கும் கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
நெல்லை மேயர் ராஜினாமா செய்தது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு திங்கட்கிழமை வெளியிடப்படும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேதியில் ஆசிரியர் குடும்பமே படுகொலை.. குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் விபத்து: என்ன நடந்தது?

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை திடீர் பாதிப்பு.. என்ன காரணம்?

ஜாமீனில் வெளிவந்த மகா விஷ்ணு.. சிறைவாசலில் ஆதரவாளர்களுக்கு ஆசி..!

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments