Webdunia - Bharat's app for daily news and videos

Install App

6 மாதத்துக்கு பிறகு ஆம்னி பேருந்துகள் இயக்கம் மீண்டும் தொடங்கியது!

Webdunia
வெள்ளி, 16 அக்டோபர் 2020 (09:14 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு தமிழகம் முழுவதும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. குறிப்பாக பேருந்து போக்குவரத்து மாவட்டங்களுக்கு இடையே தொடங்கப்பட்டது.

அதோடு செப்டம்பர் 7 முதல் மாநிலம் முழுவதும் பேருந்துகள் மற்றும் பயணிகள் ரயில் இயக்கப்படுகின்றன. அதனால் 7 ஆம் தேதி முதல் ஆம்னி பேருந்துகளும் இயக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பாக சில கோரிக்கைகளை வைத்து இவை நிறைவேற்றப்பட்டால் மட்டுமே ஆம்னி பேருந்து சேவை துவங்கப்படும் என கூறப்பட்டது.

ஆனால் அரசு இதை பெரிதாக கண்டுக்கொள்ளவில்லை. இதனோடு தற்போது பண்டிகை காலமும் நெருங்கி வருவதால் வேறு வழி இல்லாமல் இன்று முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கம் துவங்கியுள்ளது. சுமார்  6 மாதத்துக்கு பிறகு தமிழகத்தில் ஆம்னி பேருந்துகளின் சேவை மீண்டும் தொடங்கியுள்ளதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் 50% இருக்கைகளுடன் வழக்கமான கட்டணத்துடன் இயக்கப்படுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி போராட்டம்: அன்புமணி அறிவிப்பு..!

விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அவசியம் தான்: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ..!

திருப்பதி அலிபிரி நடைபாதையில் சிறுத்தை.. அலறி அடித்து ஓடிய பக்தர்கள்..!

அடுத்த மாதம் திருமணம்.. நேற்று பரிதாபமாக ரயில் விபத்தில் இறந்த வாலிபர்.. மதுரையில் அதிர்ச்சி சம்பவம்..!

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கியதால் ஆத்திரம்.. நீதிபதி மீது செருப்பை வீசிய கைதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments