Webdunia - Bharat's app for daily news and videos

Install App

23 ஆண்டுகளுக்குப் பிறகு பெருவெள்ளம்: ஒகேனக்கல் பகுதியில் பரபரப்பு

Webdunia
செவ்வாய், 13 ஆகஸ்ட் 2019 (08:44 IST)
கடந்த சில நாட்களாக கர்நாடகத்தில் வரலாறு காணாத கனமழையால் அப்பகுதி மக்கள் வெள்ளத்தால் தத்தளித்து வரும் நிலையில் நாடு முழுவதிலும் இருந்து அம்மாநிலத்திற்கு நிவாரண உதவிகள் குவிந்து வருகிறது
 
இந்த நிலையில் கர்நாடகத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக ஒகேனக்கலில் அதிகளவு தண்ணீர் வந்து கொண்டிருந்தது. சமீபத்தில் ஒகேனக்கலில் மெயின் அருவிக்கு செல்லும் பாதையில் இருந்த தடுப்புகம்பிகள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டன. ஒகேனக்கலில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் கூறி வருகின்றனர்.
 
கர்நாடகா மாநிலத்தில் மேலும் மழை பெய்யும் என வானிலை அறிக்கை தெரிவித்துள்ளதால் ஒக்கேனக்கல் பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஒகேனக்கல் அருவிக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
23 ஆண்டுகளுக்கு முன் ஒருமுறையும், 58 ஆண்டுகளுக்கு முன் ஒருமுறையும் இதேபோன்ற வெள்ளப்பெருக்கு ஒகேனக்கல் பகுதியில் ஏற்பட்டுள்ளதாகவும், அதனையடுத்து தற்போதுதான் இந்த அளவு தண்ணீர் ஒகேனக்கல் அருவியில் வந்து கொண்டிருப்பதாகவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உங்கள் விஜய் நான் வரேன்' தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்கும் தவெக தலைவர் விஜய்..!

வெளிநாட்டு பயணங்களில் பாதுகாப்பு விதிகளை மீறிய ராகுல் காந்தி - சிஆர்பிஎஃப் புகார்!

இரண்டாவது மனைவியின் கள்ளக்காதல்.. கணவன் செய்த இரட்டை கொலை..!

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் துரைமுருகன்: அமைச்சரை முற்றுகையிட்ட பெண்கள்!

பிரதமர் மோடி நாளை மணிப்பூர் பயணம்: நல்லிணக்கத்திற்கான நம்பிக்கை அதிகரிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments