Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜெயலலிதா வீட்டு முன்பு தீக்குளிக்க முயன்ற அதிமுக தொண்டர் கைது

ஜெயலலிதா வீட்டு முன்பு தீக்குளிக்க முயன்ற அதிமுக தொண்டர் கைது

ஜெயலலிதா வீட்டு முன்பு தீக்குளிக்க முயன்ற அதிமுக தொண்டர் கைது
, செவ்வாய், 22 மார்ச் 2016 (02:27 IST)
முதல்வர் ஜெயலலிதா வீட்டு முன்பு அதிமுக தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 
தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான  ஜெயலலிதாவின் இல்லம் போயஸ் கார்டன் பகுதியில் அமைந்துள்ளது. இந்த பகுதிக்கு நேற்று வந்த, திருச்சி மாவட்டம், மணப்பாறை அதிமுக முன்னாள் மாணவரணி செயலாளர் மோகன் திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலை செய்ய முயன்றார். இதைக் கண்டு அங்கிரந்த போலீசார் திடுக்கிட்டனர். பின்பு, அவரை தீக்குளிக்க முடியாதபடி பிடித்து, கைது செய்தனர்.
 
போலீஸ் விசாரணையில், திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த மோகன், தனது மகனுக்கு வேலை பெற்று தருவதற்காக கூட்டுறவு சங்கத் தலைவர் வெங்கடேசனிடம் இரண்டு லட்சம் ரூபாய் பணம் கொடுத்து பல மாதம் ஆகிறது. ஆனால், வேலையும் கிடைக்கவில்லை. கொடுத்த பணமும் கிடைக்கவில்லை. இதனால் விரகத்தில் அவர் தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது. இது குறித்து, மேலும், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Share this Story:

Follow Webdunia tamil