Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சபாநாயகருடன் கொறடா ஆலோசனை; 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்களா?

Webdunia
வியாழன், 14 செப்டம்பர் 2017 (11:24 IST)
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு சபாநாயகர் பதில் அளிக்குமாறு அளித்த நோட்டீஸ் காலக்கெடு இன்றுடன் முடிவடையும் நிலையில் அரசு கொறடா சபாநாயகர் தனபாலை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.


 

 
முதலவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுகிறோம் என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் ஆளுநரை சந்தித்து கடிதம் கொடுத்தனர். இதனால் எடப்பாடி பழனிச்சாமி அணி சட்டசபையில் பெரும்பான்மையை இழந்தது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தன்னிச்சையாக செயல்பட்டதாக அரசு கொறடா ராஜேந்திரன் சபாநாயகர் தனபாலிடம் புகார் அளித்தார்.
 
இதையடுத்து கொறடாவின் புகார் குறித்து பதிலளிக்குமாறு சபாநாயகர் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களுக்கு நோட்டீஸ் அனுப்பினார். சபாநாயகர் பதில் அளிக்குமாறு அனுப்பிய நோட்டீஸ் காலக்கெடு இன்று முடிவடைகிறது. இந்நிலையில் அரசு கொறடா ராஜேந்திரன் சபாநாயகர் தனபாலை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். 
 
இந்த ஆலோசனைக்கு பிறகு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. மேலும் தற்போது தினகரன் அணியில் உள்ள 18 எம்.எல்.ஏ.க்கள் கர்நாடகாவில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments