Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அடுத்த தேர்தலிலும் அதிமுக வெற்றிபெற வேண்டும்: ஜெயலலிதா

அடுத்த தேர்தலிலும் அதிமுக வெற்றிபெற வேண்டும்: ஜெயலலிதா
, செவ்வாய், 15 செப்டம்பர் 2015 (00:31 IST)
அடுத்து வரும்  சட்டமன்றப் பொதுத் தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறச் செய்வது கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரின் தலையாய கடமையாக அமைய வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, தமிழக முதல்வர் ஜெயலலிதா அதிமுக தொண்டர்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியுள்ளதாவது:-
 
எம்.ஜி.ஆரின் ரத்தத்தின் ரத்தமான எனது உயிரினும் மேலான எனதி அருமைக் கழக உடன் பிறப்புகளே.
 
ஆயிரம் ஆயிரம் தலை முறைக்கு தமிழர்கள் தழைத் தோங்கி வாழ பிறந்த  நமது அன்புக்குரிய பேரறிஞர் அண்ணாவின் 107ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இந்த மடல் வழியாக, உங்களை சந்திப்ப தில் மட்டற்ற மகிழ்ச்சி அடை கிறேன்.
 
தமிழ் இனத்தின் முன்னேற்றம் ஒன்றையே தனது வாழ்வின் இலட்சியமாகக் கொண்டு,  அந்த இலக்கினை அடைய தனனையே அர்ப்பணித்துக் கொண்டு வாழ்ந்த பெருந்தகைதான் அறிஞர் அண்ணா.
 
அவரது கனவுகளை நனவாக்கி, அவர் காண விரும்பிய வளமும், புகழும் மிக்க தமிழகத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் நமக்கு, அண்ணா அவர்களின் பிறந்த நாள் விழா என்பது குடும்பத்துடன் கொண்டாடி மகிழ வேண்டிய திருநாள் என்றால் அது மிகையல்ல.
 
எளிய குடும்பத்தில் பிறந்து, கடுமையான உழைப்பையும், பொது வாழ்வின் இலக் கணங்களையும் தந்தை பெரியாரிடத்தில் பயின்று, புத்துலகம் படைத்து, புதிய பாதை அமைத்து புதியதோர் அரசியல் இயக்கம் படைத்தார் அண்ணா.
 
அந்த அருமை மிகு அண்ணாவின் மறைவிற்குப் பிறகு ஏற்பட்ட அசாதாரண சூழலில் எம்.ஜி.ஆரின் கருணையால் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்த  ஒரு தீய சக்தி, அண்ணா அவர்களது சிந்தனையில் தமிழ்ச் சமூகத்தின் விடியலுக்காக உருவாக்கிய இயக்கத்தை தனது குடும்பச் சொத்தாக மாற்றிக் கொண்டது.
 
அண்ணா மீது கொண்ட எல்லையில்லாத அன் பினாலும், தமிழக மக்களுடைய முன்னேற்றத்தின் மீது அண்ணாவுக்கு இருந்ததைப் போலவே ஆழமான அக்கறை கொண்டிருந்ததாலும்,  தீய சக்தியிடமிருந்து அண்ணாவின் பேரியக் கத்தை மீட்டெடுத்து, அதற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று பெயர் வைத்து  மாபெரும் மக்கள் இயக்கத்தை உருவாக்கினார்.
 
பல கோடித் தொண்டர்களின் உழைப்பு ஒரு குடும்பத்தின் செல்வக் குவிப்புக்குப் பயன்படும் அவலத்தை துடைத்தெறிந்தார்.  அதன் மூலம் உண்மையான ஜனநாயகத்தின் பயன்களை தமிழக மக்கள் அனைவரும் பெற வழிவகை செய்தார்.
 
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரால் பொது வாழ்விற்கு அழைத்து வரப்பட்ட நான், அண்ணாவின் கொள்கைகளையும், எம்.ஜி.ஆரின் தன்னலமற்ற லட்சியங்களையும் எனது வாழ்வின் இரு கண்களாகக் கொண்டு, இந்த இயக்கம் வெற்றி அடைய வழிநடத்தி வருகிறேன்.
  
தமிழக மக்களுக்காக என்னையே அர்ப்பணித்து வாழுகின்ற பெரும் பாக்கியத்தை இறைவன் எனக்கு அருளி இருக்கிறார்.
 
எனவே தான், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் அரசியல் பாதையில், மக்கள் நலன்களைக் காப்பதிலும், மாநிலத்தின் உரிமைகளை மீட்பதிலும், பெண் கல்வியை வளர்ப்பதிலும், எல்லோருக்கும் வாழ்வின் இன்பங்கள் அனைத்தும் கிடைப்பதை உறுதி செய்வதிலும் எனது தலைமையிலான அதிமுக அரசு நாட்டுக்கே முன்னோடியாகத் திகழ்வருகிறது.
 
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி முன் எப்போதும் இல்லாத அளவிற்கு  உயர வேண்டும், அந்த வளர்ச்சி அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்பதற்காக, அண்மையில் உலக முதலீட்டாளர்கள் சந்திப்பை வெற்றிகரமாக நடத்தியது இந்த அரசு.
  
ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் உறுதிப்படுத் திட வேண்டும் என்ற இலக் கோடு, இந்த முதலீட்டாளர்கள் மாநாடு நடத்திடத் தேவை யான அறிவுரைகளையும், ஊக்கத்தையும்நான் வழங்கினேன்.  அதன் பலனாக உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 2,42,160 கோடி ரூபாய்க்கான முதலீடுகள் குவிந்தது. மேலும், அந்த ஒப்பந்தங்கள் எல்லாம் உறுதிப்படுத்தப்பட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.
   
கடந்த 20 ஆண்டுகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் பெறப்பட்ட ஒட்டு மொத்த முதலீடுகளைவிட இந்த 2 நாட்களில் பெறப்பட்ட முதலீடுகளே அதிகமானதாகும். இதன் பலனாக தமிழகத்தில் மிகப் பெரும் தொழில் புரட்சி ஏற்படும்.  குறிப்பாக, தமிழகத்தின் தென் மாவட்டங்கள் சுபீட்சம் அடையும்.  அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறுவார்கள்.
 
எண்ணற்ற இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் வேலை வாய்ப்பு, அவர்களின் குடும்பங்களுக்கு நிரந்தர வருவாய், தமிழக சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பல புதிய தொழிற்சாலைகளை தொடங்குவதற்கான வாய்ப்பு ஆகியவற்றை உலக முதலீட்டாளர்கள் சந்திப்பு உருவாக்கித் தந்துள்ளது.
 
இந்த ஆண்டு  அண்ணா பிறந்த நாள் விழாவில் அவரது நினைவுகளுக்கு நாம் செலுத்தும் போற்றுதலாக இந்த சந்திப்பின் வெற்றிச் செய்தி அமைந்துள்ளது.
 
எனது தலைமையிலான அதிமுக அரசு நிகழ்த்தி இருக்கும் நாடு போற்றும் பல்வேறு மகத்தான சாதனைகளை தமிழக மக்கள் அனைவருக்கும் எடுத்துக் கூறி, அடுத்து வரும்  சட்டமன்றப் பொதுத் தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறச் செய்வது கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவரின் தலையாயப் பணியாக அமைய வேண்டும்.
 
இந்தப் பணியைச் செய்து முடித்து, அடுத்து வரும் சட்டமன்றப் பொதுத் தேர்தலில் நாம் பெற உள்ள மகத்தான வெற்றியை அண்ணாவுக்கும், எம்.ஜி.ஆருக்கும் காணிக்கை ஆக்குவோம் என தெரிவித்துள்ளார். 
 

Share this Story:

Follow Webdunia tamil