Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆர்.கே.நகர் தொகுதியில் நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார் ஜெயலலிதா

ஆர்.கே.நகர் தொகுதியில் நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார் ஜெயலலிதா
, வியாழன், 4 ஜூன் 2015 (12:46 IST)
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார். 
 

 

சென்னை, ஆர்.கே.நகர் சட்டசபைத் தொகுதிக்கு வரும் 27ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தொகுதியில் அதிமுக சார்பில், அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா போட்டியிடுகிறார்.
 
இந்நிலையில், இந்த தேர்தலுக்கான வேட்புமனு  தாக்கல் நேற்று முதல் தொடங்கியது. ஆனால், 5ஆம் தேதி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சமீபகாலமாக ராசியான தேதியாக கருதப்படுகிறது. 
 
இதனையடுத்து, நாளை தண்டையார் பேட்டையில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் ஜெயலலிதா வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
 
முதலமைச்சர் ஜெயலலிதா வருகையை முன்னிட்டு, அங்கு காவல்துறையின் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil