பொன்.ராதாகிருஷ்ணன் டெபாசிட் வாங்குவாரா?: அதிமுக கிண்டல்!

Webdunia
செவ்வாய், 23 ஜனவரி 2018 (17:15 IST)
அதிமுகவின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளரான முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன் பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை விமர்சித்துள்ளார்.
 
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பாஜகவை சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணன். தற்போது உள்ள மத்திய அரசில் தமிழகத்தை சேர்ந்த ஒரே அமைச்சரும் இவர் தான். இதனால் பொன்.ராதாகிருஷ்ணனின் பேச்சு அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
 
இந்நிலையில் சமீபத்தில் பேருந்து கட்டண உயர்வை ஆதரித்த பொன்.ராதாகிருஷ்ணன் அதன் பின்னர் அதற்கு எதிரான கருத்தை கூறி, உயர்த்திய பேருந்து கட்டணத்தை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தினார்.
 
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் அதிகாரப்பூர்வ செய்தித்தொடர்பாளர் வைகைசெல்வன், தமிழகத்தில் பாஜக பின்னடைவை நோக்கி செல்கிறது. ஆர்கே நகர் தேர்தலில் நோட்டாவை மிஞ்ச முடியவில்லை. கன்னியாகுமரியில் மீண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டால் டெபாசிட் வாங்குவாரா என்பது சந்தேகம் தான் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாடு தழுவிய 'டிஜிட்டல் கைது' மோசடி: வழக்குகளை சிபிஐ-க்கு மாற்ற உச்ச நீதிமன்றம் பரிந்துரை!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: திமுக கூட்டணி கட்சிகள் அவசர ஆலோசனை!

நாளையே தமிழ்நாட்டில் SIR சிறப்பு திருத்தம்! முக்கிய தேதிகள்!

இன்று இரவு கொட்டித் தீர்க்கப் போகும் கனமழை! - எந்தெந்த மாவட்டங்களில்?

உ.பி. முதல்வர் யோகி குறித்து சர்ச்சைப் பேச்சு: அரசு மருத்துவர் பணியிடை நீக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments