Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொன்.ராதாகிருஷ்ணன் டெபாசிட் வாங்குவாரா?: அதிமுக கிண்டல்!

Webdunia
செவ்வாய், 23 ஜனவரி 2018 (17:15 IST)
அதிமுகவின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளரான முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன் பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனை விமர்சித்துள்ளார்.
 
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பாஜகவை சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணன். தற்போது உள்ள மத்திய அரசில் தமிழகத்தை சேர்ந்த ஒரே அமைச்சரும் இவர் தான். இதனால் பொன்.ராதாகிருஷ்ணனின் பேச்சு அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
 
இந்நிலையில் சமீபத்தில் பேருந்து கட்டண உயர்வை ஆதரித்த பொன்.ராதாகிருஷ்ணன் அதன் பின்னர் அதற்கு எதிரான கருத்தை கூறி, உயர்த்திய பேருந்து கட்டணத்தை வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தினார்.
 
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுகவின் அதிகாரப்பூர்வ செய்தித்தொடர்பாளர் வைகைசெல்வன், தமிழகத்தில் பாஜக பின்னடைவை நோக்கி செல்கிறது. ஆர்கே நகர் தேர்தலில் நோட்டாவை மிஞ்ச முடியவில்லை. கன்னியாகுமரியில் மீண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டால் டெபாசிட் வாங்குவாரா என்பது சந்தேகம் தான் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

தென்மேற்கு பருவமழை தொடங்கும் தேதி அறிவிப்பு.. 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை..!

தமிழ் மக்கள் மிகவும் புத்திசாலித்தனமாக முடிவெடுக்க வேண்டும்.. நாமல் ராஜபக்சே

ஒரே நாடு, ஒரே தேர்தல் அடுத்த ஆட்சியில் அமல்படுத்தப்படும்: அமித் ஷா உறுதி

காங்கிரஸ் கட்சிக்கு 3 இலக்க வெற்றி கிடைக்காது: பிரசாந்த் கிஷோர் உறுதி..!

கரையை கடந்தது புயல்.. 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு இறக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments