Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுகவில் மீண்டும் தளவாய் சுந்தரம்.. பறிபோன பதவி மீண்டும் கிடைத்தது..!

Siva
திங்கள், 18 நவம்பர் 2024 (18:58 IST)
ஆர்எஸ்எஸ் பேரணியை தொடங்கி வைத்ததால், அதிமுக கன்னியாகுமரி மாவட்ட கிழக்கு மாவட்ட செயலாளர் தலைவாய் சுந்தரம் அனைத்து பொறுப்புக் கூறுகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டதாக, கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்த நிலையில், தற்போது அவர் மீண்டும் அதிமுகவில்  அதே பொறுப்புகள் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தளவாய் சுந்தரம் உரிய விளக்கமளித்ததால், அவர் வகித்து வந்த கட்சி பதவிகள் மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் மற்றும் கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தலைவாய் சுந்தரம், கன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட காரணத்தினால், அது குறித்து விளக்கம் கேட்டு, அவர் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், இந்நிகழ்வில் கலந்து கொண்டது சம்பந்தமாக தளவாய் சுந்தரம் வருத்தம் தெரிவித்து, தலைமைக்கு விளக்கம் அளித்துள்ளார். இதனை அடுத்து, அவர் அதிமுக அமைப்பு செயலாளர் மற்றும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் பொறுப்பில் இன்று முதல் நியமனம் செய்யப்படுகிறார் என்று எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென வெடித்த குப்பைத்தொட்டி.. வீசியெறியப்பட்ட தொழிலாளி பரிதாப பலி! - என்ன நடந்தது?

தாயை கொன்றுவிட்டு தற்கொலை செய்துக் கொண்ட மகன்! கடைசியில் நடந்த திருப்பம்!

8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! விரைவில் அதிகரிக்கும் வெயில்! - வானிலை ஆய்வு மையம்!

சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்! - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments