Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மாவட்ட அதிகாரிகளை மாற்றிய தேர்தல் கமிஷனுக்கு அதிமுக கடும் எதிர்ப்பு

மாவட்ட அதிகாரிகளை மாற்றிய தேர்தல் கமிஷனுக்கு அதிமுக கடும் எதிர்ப்பு
, திங்கள், 2 மே 2016 (17:45 IST)
தமிழக சட்டசபை தேர்தல் பணியில் ஈடுப்படும் ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் அதிகாரிகளை மாற்றியது குறித்து அதிமுக-வினர் தேர்தல் அமிஷனுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


 
 
9 மாவட்ட ஆட்சியர்கள், 7 காவல்துறை கண்காணிப்பாளர்கள், 5 காவல்துறை துனை கண்காணிப்பாளர்கள் மற்றும் ஒரு மாவட்ட வருவாய் அதிகாரி ஆகியோர் தேர்தல் கமிஷனால் மற்றப்பட்டனர்.
 
இந்நிலையில், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை எம்.பி, அதிமுக சார்பாக தேர்தல் ஆணையர் நசீம் ஜைதியிடம் மனு ஒன்று அளித்துள்ளார். அந்த மனுவில், தேர்தலுக்கு குறைந்த நாடகளே உள்ள நிலையில், தேர்தல் பணி அதிகாரிகளை மாற்றியமைப்பது ஆளும் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு சாதகமான அமையும் என்றும் தேர்தல் கமிஷன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
 
மேலும், இது முன்னெப்போதும் இல்லாத செயல், தேர்தலுக்கு குறுகிய நாட்களே உள்ள நிலையில் அதிகாரிகளின் பணி மாற்றத்தை திரும்பி பெற வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கூட்டணியில் ஈகோ பிரச்சனை?: அதிருப்தியில் விஜயகாந்த், சாமரம் வீசும் வைகோ!