Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெயலலிதா பேனரை அகற்றிய போலீசாரை மிரட்டிய கரை வேட்டி : வைரல் ஆடியோ

Webdunia
வெள்ளி, 12 பிப்ரவரி 2016 (12:32 IST)
முதலமைச்சர் ஜெயலலிதாவின் பேனரை அகற்றிய காவல்துறை ஆய்வாளர் ஒருவரை அதிமுக பிரமுகர் ஒருவர் போனில் மிரட்டிய ஆடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.


 

 
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை எனும் ஊரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில், ஜெயலலிதாவின் பேனர் வைக்கப்பட்டிருந்தது. அந்த பேனர் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்தது. மேலும், அங்கு பேனர் வைக்க போலீசாரிடம் அனுமதி பெறவில்லை.
 
இதனால், அந்த பகுதி காவல்துறை ஆய்வாளர் சாம்சன், அந்த பேனரை அகற்ற உத்தரவிட்டார்.  அதனால் கோபமடைந்த அந்த பகுதி ஒன்றிய செயலாளர் உதயகுமார், சாம்சனுக்கு போன் செய்து மிரட்டியுள்ளார். மேலும் அவரை ஒருமையில் திட்டியுள்ளார்.
 
அந்த ஆடியோ எப்படியோ வெளியாகி, சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த சம்பவம் ஆளுங்கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

நன்றி : புதிய தலைமுறை

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments