Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளுநர் தேநீர் விருந்து.. திமுக அதிமுகவின் நிலை என்ன?

Mahendran
புதன், 14 ஆகஸ்ட் 2024 (11:34 IST)
ஆளுநர் தேநீர் விருந்தில் பங்கேற்பதில்லை என திமுகவின் கூட்டணி கட்சிகள் அறிவித்துள்ள நிலையில் சற்றுமுன் அதிமுக இந்த தேநீர் விருந்தில் கலந்து கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தில் ஆளுநர் மாளிகையில் அரசியல் கட்சிகளுக்கு தேநீர் விருந்து வைப்பது வழக்கமாக இருந்து வரும் நிலையில் இந்த ஆண்டு நடைபெறும் தேநீர் விருந்தில் கலந்து கொள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில் திமுக இதுவரை இந்த தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே திமுக சார்பில் முதலமைச்சர் அல்லது அமைச்சர்கள் பங்கேற்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கவர்னர் தேநீர் விருந்தில் பங்கேற்பதாக அதிமுக அறிவித்துள்ளது. அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், பெஞ்சமின் ஆகியோர்கள் கலந்து கொள்வார்கள் என அதிமுக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments