Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருச்சி சிவாவுடன் என் மனைவியும் நெருக்கமா இருந்தாங்க : அதிமுக பெண் எம்.பியின் கணவர் பேட்டி

திருச்சி சிவாவுடன் அதிமுக எம்.பி. சத்தியபாமா நெருக்கம்?

திருச்சி சிவாவுடன் என் மனைவியும் நெருக்கமா இருந்தாங்க : அதிமுக பெண் எம்.பியின் கணவர் பேட்டி
, சனி, 20 ஆகஸ்ட் 2016 (12:44 IST)
சமீபத்தில்தான் அதிமுக எம்.பி. சசிகலா புஷ்பா, டெல்லி விமான நிலையத்தில் திமுக எம்.பி. திருச்சி சிவாவை கன்னத்தில் அடித்து பரபரபரப்பை ஏற்படுத்தினார்.


 

 
அதைத் தொடர்ந்து அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து சசிகலா புஷ்பா அதிரடியாக நீக்கப்பட்டார். ஆனால், அவர் தன்னுடைய எம்.பி. பதவியை ராஜினாமா செய்யவில்லை. அதன்பின், சசிகலா புஷ்பாவும், திருச்சி சிவாவும் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் வெளிவந்தன.
 
இந்நிலையில், அதிமுகவின் லோக்சபா எம்.பி.யான சத்தியபாமா மீது அவர் கணவர் பகீர் குற்றச்சாட்டுகளை கூறியுள்ள விவகாரம் தமிழக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் சமீபத்தில் தனது மனைவி சத்தியபாமாவுக்கு விவாகரத்து நோட்டீசும் அனுப்பியுள்ளார்.
 
இவர் பிரபல வார இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது : 
 
என் மனைவி சத்தியபாமா, சசிகலா புஷ்பா, மல்லிகா பரமசிவம் மற்றும் திருச்சி சிவா ஆகியோர் கட்சியை தாண்டி ஒருவருக்கொருவர் அன்யோன்யமாக இருந்தார்கள். இது தொடர்பாக நான் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு புகாரும் அனுப்பினேன். ஆனால், அவர் அவரிடம் அந்த மனுவை சேர விடாமல் தடுத்துவிட்டனர்.
 
தற்போது சசிகலா புஷ்பா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதுபோல் என் மனைவி மீது ஒருநாள் நடவடிக்கை எடுக்கப்படும் என காத்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தாயை காப்பாற்ற கொலை செய்த 6 வயது சிறுவன்.......