Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவுக்கு ஆள் சேர்க்கும் அதிமுக எம்.பி?- காலியாகிறதா அதிமுக கூடாரம்?

Webdunia
புதன், 26 ஜூன் 2019 (16:07 IST)
திருப்பங்கள் மீது திருப்பங்களாக, திரைப்படத்தை விட விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது தமிழக அரசியல் கட்சிகளின் கதை. ”அண்ணன் எப்போ சாவான், திண்ணை எப்போ காலியாகும்” என்ற கிராமத்து பழமொழியை போல சரியான தலைமை இல்லாத கட்சிக்கு ஆளுக்கு ஆள் மல்லுக்கு நிக்கிறார்கள்.

அவர்களை சுட்டிக்காட்டி பலர் சொந்த கட்சிகளும் தொடங்கிவிட்டார்கள். தற்போது அமமுக கட்சிக்குள் தங்க.தமிழ்செல்வனால் ஒரு பூகம்பம் வெடித்திருக்க, தொடர்ந்து அதிமுக எம்.பி சசிகலா புஷ்பா அவர்களும் தனது கருத்தின் மூலம் அடுத்த பூகம்பத்தை வெடிக்க செய்திருக்கிறார்.

சமீபத்தில் பேசிய சசிகலா புஷ்பா “மோடி சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார். ஆனால் அவரது திட்டங்களை தமிழகத்தில் யாரும் சரியாக கொண்டுவரவில்லை. மோடி ஆட்சியே தமிழகத்துக்கு சரியான ஆட்சி” என்று சாடைமாடையாக பேசியிருக்கிறார்.

இதன் மூலம் சசிகலா புஷ்பா தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வர வேண்டும் என மறைமுகமாக பேசுவதாக கூறப்படுகிறது. மேலும் சில அதிமுக அமைச்சர்கள் பாஜகவில் இணைய திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அதிமுக உறுப்பினர்கள் யாரும் விமர்சனத்திற்குரிய எந்த பேட்டியும் தர வேண்டாம் என மேலிடத்தில் உத்தரவிட்டும் சசிகலா இப்படி பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments