Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சசிகலாவை நீக்க 3 அமைச்சர்கள் எதிர்ப்பு - தொடரும் சிக்கல்

Webdunia
திங்கள், 21 ஆகஸ்ட் 2017 (13:41 IST)
அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவை நீக்க மூன்று அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் இரு அணிகள் இணைவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.


 

 
இன்று காலை ஓ.பி.எஸ் தன்னுடைய ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகம் வருவார் எனவும், அங்கு எடப்பாடி பழனிச்சாமியும், அவரும் செய்தியாளர்களை சந்தித்து அணிகள் இணைப்பு பற்றி அறிவிப்பார்கள் எனவும் கூறப்பட்டது. இதனால் ஏராளமான அதிமுக தொண்டர்கள் அங்கு குவியத் தொடங்கியுள்ளனர். 
 
அந்நிலையில், தினகரனை நீக்கியதை போல், அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சசிகலா நீக்கி உத்தரவிட்ட பின்புதான் நாங்கள் தலைமை அலுவலகத்திற்கு வருவோம் என ஓ.பி.எஸ் அணி திடீர் நிபந்தனை விதித்தது. அதனால் இரு அணிகளும் இன்று இணைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், ஓபிஎஸ் தரப்பினரிடையே எடப்பாடி அணி தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தது.
 
இந்நிலையில், ஓ.பி.எஸ் அணியின் கோரிக்கையை ஏற்று சசிகலாவை நீக்கும் தீர்மானம் தயாரிக்கப்பட்டுவிட்டதாக தெரிகிறது. ஆனால், அவரை நீக்க எதிர்ப்பு தெரிவித்து 3 அமைச்சர்கள் தீர்மானத்தில் கையெழுத்திட மறுப்பதாக தெரிகிறது. அந்த 3 அமைச்சர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஜெயக்குமார் உள்ளிட்டோர் இறங்கியுள்ளதாக தெரிகிறது. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போதைப்பொருள் விற்றவர்கள் எங்கே? ஸ்ரீகாந்த், கிருஷ்ணா அப்பாவிகள்: சீமான்

தேவைப்பட்டால் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் நடத்துவோம்: டிரம்ப் எச்சரிக்கை..!

கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்.. 55 வயது நபர் கைது..!

புரி ஜெகன்நாதர் ரத யாத்திரையில் அதானி குடும்பம்.. 40 லட்சம் பக்தர்களுக்கு உணவு, குளிர்பானம் வழங்கி உதவி..!

தபால் நிலையங்களிலும் யுபிஐ வசதி: ஆகஸ்ட் முதல் டிஜிட்டல் புரட்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments