Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜீயர் பேசியது தவறு இல்லை, அவரை கோபப்படுத்தியது தான் தவறு: முட்டுக்கொடுக்கும் அதிமுக அமைச்சர்!

Webdunia
சனி, 27 ஜனவரி 2018 (20:09 IST)
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜம் பேசியிருந்த சோடா பாட்டில் வீசத்தெரியும் என்ற பேச்சுக்கு கருத்து தெரிவித்த அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஜீயர் கோபப்படும் அளவுக்கு பிறர் பேசியது தான் தவறு என அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார்.
 
கவிஞர் வைரமுத்துவுக்கு எதிராக திருச்செங்கோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர், உலகத்தில் இனி யாராவது மேடை போட்டுக் கடவுளை பற்றி பேசினால் நாம் அங்கு போக வேண்டும் என்றார்.
 
இத்தனை நாள் சாமியார்களெல்லாம் சும்மா இருந்தோம். எங்களுக்கும் கல் எறியவும் தெரியும்; சோடா பாட்டில் வீசவும் தெரியும். ஆனால், அதை செய்ய மாட்டோம். எதற்கும் துணிவோம் என ஆவேசமாக பேசியுள்ளார்.
 
எங்களுக்கும் சோடா பாட்டில் வீசத்தெரியும், கல் எறியத்தெரியும் என ஜீயர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
 
ஆனால் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இதுகுறித்து பேசியபோது, ஜீயர் கோபமாக பேசும் வகையில் இந்து கடவுளை விமர்சித்து பேசியது தவறு. பல பிரச்னைகள் இருக்கையில் வைரமுத்து, விஜயேந்திரர் குறித்து பேசுவது தேவையற்றது என்றார் அவர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

15 ஆயிரத்திற்காக பண்ணை அடிமையான சிறுவன்! சடலமாக திரும்பிய சோகம்! - என்ன நடந்தது?

படிக்கட்டில் பயணம் செய்தால் ரூ.1000 அபராதம்! - தெற்கு ரயில்வே அதிரடி முடிவு!

அண்டர்கிரவுண்டில் பார்க்கிங் கட்ட கூடாது: முதல் மாடிக்கு மாற்றுங்கள்: துணை முதல்வர்..!

பற்றி எரிகிறது பாகிஸ்தான்.. தண்ணீர் பிரச்சனையால் அரசுக்கு எதிராக போராட்டம்.. 2 பேர் பலி..!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments