Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரெய்டுக்கு எதிர்ப்பு - அதிமுகவினர் போராட்டம்; போலீஸ் குவிப்பு!

Webdunia
வெள்ளி, 8 ஜூலை 2022 (09:03 IST)
லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீடு முன் அதிமுகவினர் போராட்டம். 

 
ஏற்கனவே கடந்த சில மாதங்களில் ஒரு சில அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்த நிலையில் தற்போது அதிமுக ஆட்சியில் உணவு துறை அமைச்சராக இருந்த காமராஜ் வீட்டில் முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்து வருகின்றனர். 
 
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரின் அடிப்படையில் அவருடைய வீட்டில் சோதனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளன. முன்னாள் அமைச்சர் காமராஜ் வருமானத்துக்கு அதிகமாக ரூ.58.44 கோடி சொத்து சேர்த்ததாக புகார் எழுந்துள்ளது. முன்னாள் அமைச்சர் காமராஜ் அவரது மகன்கள் உள்பட 6 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. 
 
சென்னை, திருவாரூர், தஞ்சை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் முன்னாள் அமைச்சர் காமராஜ் தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மன்னார்குடியில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் வீடு முன் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பதற்றத்தை தடுக்க போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை ஏசி ரயில்.. உத்தேச அட்டவணை இதோ..!

திராவிட மாடல் அரசைத் துரும்பளவு கூட அசைத்துப் பார்க்க முடியாது.. அமைச்சர் ரகுபதி

மீண்டும் தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை.. இந்த முறை எஸ்டிபிஐ நிர்வாகி வீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments