தலைவருக்கு நான்தான் மரியாதை செய்வேன்! – எடப்பாடியாரால் எக்குதப்பாக மோதிய அதிமுகவினர்!

Webdunia
வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (11:19 IST)
சாத்தூர் சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு மரியாதை அளிப்பதில் அதிமுகவினரிடையே கோஷ்டி மோதல் எழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக எடப்பாடி பழனிசாமி 9 மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் சாத்தூர் வழியே சென்றபோது அவருக்கு அங்கு திரண்டிருந்த அதிமுகவினர் சால்வை அணிவித்து மரியாதை செய்தனர்.

அப்போது எடப்பாடி பழனிசாமிக்கு மரியாதை செய்வதில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ ராஜவர்மன் ஆதரவாளர்களுக்கும், அதிமுக மாவட்ட செயலாளர் ராஜவர்மன் ஆட்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அது மோதலான நிலையில் போலீஸார் இருதரப்பினரையும் தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெகவில் செங்கோட்டையனுக்கு என்ன பதவி.. விஜய் சந்திப்பில் தீவிர ஆலோசனை..!

ஒரு கிலோ வெங்காயம் ஒரு ரூபாய்.. வெங்காயத்திற்கு இறுதி சடங்கு செய்த விவசாயிகள்..!

விஜய் வீட்டுக்கு சென்றார் செங்கோட்டையன்.. நாளை தவெகவில் அதிகாரபூர்வ இணைப்பு..!

இம்ரான்கான் சிறையில் கொலை செய்யப்பட்டாரா? சமூகவலைத்தளங்களில் பரவும் அதிர்ச்சி தகவல்..!

உரிமையை கொடுங்கள், பிச்சை வேண்டாம்": தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய த.வெ.க.

அடுத்த கட்டுரையில்
Show comments